சென்னை: அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தங்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோருக்கு மின்விசிறி இலவசமாக பள்ளியின் சார்பில் வழங்கப்படும் என ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இம்முயற்சி கிராம மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல முயற்சி களையும் எடுத்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால், மாணவர்களின் பெற்றோருக்குப் பள்ளியின் சார்பில் மின்விசிறி, தரமான இலவசக் கல்வி, கல்வி உபகரணங்கள், காலைச் சிற்றுண்டி, மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

