சென்னை: இணைய ரம்மி விளம்பரத்தில் நடிகர்கள் வருவதை நம்பி ஏமாந்து உங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள் என்று காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு இளையர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
வீட்டில் இருந்தே இணையத்தில் விளையாடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு இணைய மோசடிகளில் சிக்கி சிறுகச் சிறுக சேமித்த பணத்தை இழந்து, மனவேதனையில் உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலை யில், காணொளி ஒன்றை வெளி யிட்டு எச்சரித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
"ரம்மி விளையாட்டு முதலில் வெற்றி பெறுவது போல ஆசையைத் தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிடித்த நடிகர்கள் ரம்மி விளம்பரங்களில் வருவதைப் பார்த்து யாரும் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளவேண்டாம்.
"இது உண்மையான இணைய விளையாட்டு அல்ல. இணைய ரம்மி மோசடி. எனது இந்தக் காெணாளியைக் கண்டபிறகும் நீங்கள் விளையாடப் போனால் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள், அதிக அளவில் பேராசை உங்களிடம் உள்ளது என்றுதான் அர்த்தம்.
"இதைப் புரிந்துகொண்டு விளையாட்டில் ஈடுபடவேண்டாம். இதனால், பணம் நஷ்டம். அவமானம் ஏற்படும். குடும்பத்தில் பிரச் சினைகள் ஏற்படும். உயிரை இழக்கும் சூழலும் உள்ளது. எனவே, ரம்மி விளையாட்டு வேண்டவே வேண்டாம். இது தமிழக காவல்துறையின் அன்பான வேண்டு கோள்," என குறிப்பிட்டுள்ளார்.

