தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

2 mins read
064d1ed9-b353-4071-8e12-754948b317d3
குடும்பக் கட்­டுப்­பாடு செய்வதற்காக வந்த 28 வயது சங்கீதாவுக்கு தவறான முறையில் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்ததாகவும் இதனால் இவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. படம்: ஊடகம் -

சேலம்: எடப்­பாடி தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் குடும்­பக் கட்­டுப்­பாடு செய்­வ­தற்­காக வந்த பெண் ணிற்குத் தவ­றான முறை­யில் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­டதை அடுத்து அவர் உயி­ரிழந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­வத்­தைக் கண்­டித்து, உயி­ரி­ழந்த பெண்­ணின் குடும்­பத்­தி­னரும் உற­வி­னர்­களும் மருத்­து­வ­ம­னையை முற்­று­கை­யிட்டு சாலை­ம­றி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

மருத்­து­வ­ம­னை­யின் கதவு, கண்­ணா­டி­கள், கணி­னி­களை உடைத்த அவர்கள், தவ­றான சிகிச்சை அளித்த மருத்­து­வரைக் கைது செய்யும்படி போராட்­டம் நடத்­தி­னர்.

இதைத்தொடர்ந்து, சம்­பந்­தப்­பட்ட மருத்­து­வ­ம­னைக்கு வரு­வாய்த் ­துறை அதி­கா­ரி­கள் சீல் வைத்து நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர்.

ஏற்­கெ­னவே, இதே மருத்­து­வ­ரின் தவ­றான அறுவை சிகிச்சை கார­ண­மாக மூன்று பேர் உயிரிழந் ­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சேலம் மாவட்­டம், எடப்­பாடி தனி யார் மருத்­து­வ­ம­னை­யில் குடும்­பக் கட்­டுப்­பாடு அறுவை சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணிற்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­டதை அடுத்து அவர் உயி­ரி­ழந்­த­தாகச் சொல்­லப்­படுகிறது.

இங்­குள்ள ஜல­கண்­டா­பு­ரம் சவு­ரி­யூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் பூபதி, 31. இவ­ரது மனைவி சங்­கீதா, 28.

இவர்­க­ளுக்கு 11 வய­து, 7 வய தில் இரு குழந்தைகள் உள்ள நிலை­யில், கடந்த 20 நாள்­க­ளுக்கு முன்பு எடப்­பா­டி­யில் உள்ள மருத்­து­வ­மனை­யில் குடும்­பக் கட்­டுப்பாடு அறுவைசிகிச்சை செய்­துகொண்டு வீடு திரும்­பி­னார் சங்­கீதா.

இந்­நி­லை­யில், இரண்டு வார காலத்­தில் அவ­ருக்கு அடிக்­கடி வயிற்றுவலி ஏற்­படவே, திரும்­ப­வும் அதே மருத்­து­வ­ம­னை­யில் அனு மதிக்கப்பட்டார். பரி­சோ­த­னை­யில் வயிற்­றில் ரத்­தக் கட்டி இருப்­ப­தா­கக் கூறி இரண்­டா­வது முறை­யாக மருத்­து­வர் அறுவை சிகிச்சை செய்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், சங்­கீ­தா­விற்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்டதை அடுத்து, மூன்­றா­வது முறை­யாக அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்­ததில் நேற்று முன்­தினம் இரவு சங்­கீதா உயி­ரி­ழந்­தார்.