சென்னை: தமிழகத்தில் ஆளுங் கட்சி ஆதரவுடன் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதால் காவலர்களால் அதைத் தடுக்க முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
மாநிலத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும் இதனால் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"இந்தியாவிலேயே முதன்மை இடத்தில் தமிழகம் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சொல்லிக் கொள்கிறார். ஊழல் செய்வதில் முதன்ைம இடத்தில் உள்ளார். லஞ்சம் பெறுவதில் திமுக முதன்மையாக விளங்கி வருகிறது.
"ஏறக்குறைய 2,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வளவு பேரையும் ஏன் கைது செய்யவில்லை? அதற்கு என்ன காரணம்?
"அைனத்து மாவட்டங்களிலும் ஆளும் கட்சியின் ஆதரவுடன் கஞ்சா விற்பனை நடந்துகொண்டுள்ளது. காவலர்களின் கரங்கள் கட்டப்பட்டுள்ளன. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டால்தான் கஞ்சா விற்பனையைத் தடைசெய்ய முடியும்.
"இணைய ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் என்று பலமுறை வலியுறுத்திவிட்டோம். ஆனால், திமுக அரசு எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை," என்று பழனிசாமி கூறினார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறை யில் பராமரிக்கப்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
"அதிமுகவுக்கு தோ்தலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தோல்வி களால் விரக்தியின் அடிப்படையில் திமுக அரசின் மீது பழனிசாமி அவதூறுகளை அள்ளி வீசியிருக் கிறாா். தமிழக அரசியலில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தேவிட்டது. இதனை சசிகலாவும்கூட கூறியிருக்கிறாா்.
"அதிமுக ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு கிடந் தது. ஆனால், குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது," என்று கூறியுள்ளார்.

