மணல் கடத்தல்; காவல் நிலையத்தில் ஒட்டகம்

மணல் கடத்தல்; காவல் நிலையத்தில் ஒட்டகம்

1 mins read
60cc92bc-0fcd-46ed-b63f-f80a49816fb2
காவல்நிலையத்தில் மணல் வண்டியின் அருகில் நின்றுகொண்டுள்ளது ஒட்டகம். படம்: தினமலர் ஊடகம் -

சிவ­கங்­கை: மாட்­டு­வண்டி, லாரி­கள், டிராக்டர் வாகனங்கள் மூலம் மணல் கடத்­தப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இப்ேபாது ஒரு புது முயற்சியாக சிவ­கங்­கை மாவட்டத்தைச் சேர்ந்த சர­வ­ணன் என்­ப­வர் ஒட்­ட­கம் மூலம் மணல் கடத்தி உள்­ளார்.

காளை­யார்­கோ­வில் அருகே உள்ள மற­வ­மங்­க­லம், பல்­லாக்­கோட்டை­ பகுதியைச் சேர்ந்­த­வர் 52 வயது சர­வ­ணன்.

சவூதி அரே­பி­யா­வில் வேலை பார்த்­து வந்தவர், இரு மாதத்­துக்கு முன் சொந்த ஊர் திரும்பி­னார்.

இந்நிலையில், ராஜஸ்­தா­னில் இருந்து ஒட்­ட­கம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வந்தவர், இதன் மூலம் மணல் கடத்தி, பணம் சம்பா தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

காளை­யார்­கோ­வில் காவ­லர்­கள் இரவு ரோந்­துப் பணி­யில் ஈடு ­பட்­டுக்கொண்டிருந்தபோது, மாட்டு­வண்­டி­யில் ஒட்­ட­கத்­தைக் கட்டி நாட்­டாறு ஆற்­றில் இருந்து சர­வ­ணன் மணல் கடத்தி வருவது அவர்களுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, மாட்­டு­வண்டியை யும் ஒட்­ட­கத்­தையும் பறி­மு­தல் செய்­த­ காவலர்கள், காவல்நிலை யத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவர்களால் ஒட்­ட­கத்­துக்கு என்ன தீனி போடுவது, எப்படிப் பராமரிப்பது என்பது ெதரி யாததால், சர­வ­ண­னி­டமே ஒட்ட கத்தை ஒப்­ப­டைத்­த­னர்.

விசா­ர­ணைக்கு அழைக்­கும்­போது ஒட்­ட­கத்­தை­யும் அழைத்துவர வேண்­டும் என்றும் காவலர்கள் கூறி­யுள்­ளனர்.