கோவை: கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 840,000 ரூபாய் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இது லஞ்சப்பணம் என்பது விசாரணையில் உறுதியானது.
கோவை மாவட்டம், பச்சாபாளை யத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் 15,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் மட்டும் 8,000 பேருக்கும் மேலானோர் உள்ளனர்.
இந்நிலையில், இங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 20 பேரிடம் பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.
இதுபோல், ஒவ்வோர் ஊழியரிடம் இருந்தும் கட்டாயப்படுத்தி ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
அத்துடன், 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் பலரது சம்பள நிலுவைத் தொகையைத் திரும்ப வழங்குவதற்கு பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்கு லஞ்சம் தரவேண்டும் எனவும் வற்புறுத்தி உள்ளனர்.
ஊழியர்களுக்கு வந்த நிலுவைத் தொகையில் பாதியை எடுத்துக் கொண்ட நிலையில், அதிருப்திஅடைந்த ஊழியர்கள், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை அலுவலகப்பணி முடியும் நேரத்தில் கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துைறயினர் கோவை பச்சாபாளையம் ஆவின் தலைமையகத்திற்குள் புகுந்தனர்.
அதன்பின்னர், ஆவின் வளா கத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் சோதனை நடந்தது. நள்ளிரவு வரை நீடித்த சோதனையில், ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த் தியின் கார், அலமாரியில் இருந்து எட்டு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. விசாரணை தொடர்கிறது.

