புதுெடல்லி: ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட விலை மதிப்பற்ற 10 புராதனச் சிலைகள் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகக் கோவில்களில் இருந்து களவாடப்பட்ட இந்த உலோக, கற் சிலைகள் அனைத்தும் அமெ ரிக்கா, ஆஸ்திரேலியாவின் அருங் காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
துவாரபாலகர், நடராஜர், கங்கலமூர்த்தி கடயம், நாடிகேஸ்வர கடயம், நான்கு கைகளைக் கொண்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன், பார்வதி, குழந்தைப் பருவ சம்பந்தர், நின்ற கோலத்தில் குழந்தை பருவ சம்பந்தர் ஆகிய சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சிலைகளை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னி லையில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் இருந்து டிஜிபி சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார்.
கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிலைகளை முன்னிலைப்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட கோயில்களில் வெகுவிரைவில் சிலைகள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதுகுறித்து கிஷண் ரெட்டி கூறுகையில், "வெளிநாடுகளில் இருந்து இந்திய பாரம்பரியமிக்க சிலைகளை மீட்பதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அவரது அயராத முயற்சியால் கடந்த எட்டு ஆண்டுகளில் 228 தொல்பொருள்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
"தற்போது தமிழகத்தின் 10 தெய்வச் சிலைகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன," என்றார்.
மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "தமிழகத்தின் தொன்மைமிக்க 10 சிலைகளும் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம், தமிழக மக்கள் சார்பில் பிரதமருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்," என்றார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு பேசிய போது, "ஒரே நேரத்தில் 10 சிலைகள் மீட்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. மேலும், இதுபோன்ற வேறு சிலைகள் குறித்த விவரம் கிடைத்துள்ளது. அவற்றையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார்.

