மன்னிப்புக் கேட்ட அண்ணாமலை; விடாமல் துரத்தும் திமுகவினர்

மன்னிப்புக் கேட்ட அண்ணாமலை; விடாமல் துரத்தும் திமுகவினர்

2 mins read
0b5ae055-8d56-4f0f-a507-bcc86536cb62
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பண்பு திமுகவினருக்கு வராது என்று பாஜகவினர் விமர்சித்து உள்ளனர். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

சென்னை: திமு­க­வின் மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான ஆற்­காடு வீரா­சாமி மறைந்துவிட்­ட­தாக தக­வல் பர­வி­யது. அப்­போது நாமக்­கல்­லில் பொதுக்­கூட்­டத்­தில் பேசிய பார­திய ஜனதா கட்­சித் தலை­வர் அண்­ணா­மலை அதனை மக்­கள் மத்­தி­யில் பகிர்ந்­து­கொண்­டார்.

ஆனால் அந்­தத் தக­வல் தவ­றா­னது என்­பதை அறிந்த அவர், ஆற்­காடு வீரா­சாமி நல­மு­டன்­தான் இருக்­கி­றார் என்று கூறி­னார்.

இந்த நிலை­யில் ஆற்­காடு வீரா­சா­மி­யின் மகன் கலா­நிதி வீரா­சாமி எம்.பி. டுவிட்­ட­ரில் அண்ணா மலைக்கு கண்­ட­னம் தெரி­வித்து ஒரு பதிவை வெளி­யிட்­டார்.

அதில், தனது கொள்­ளுப்­பே­ர­னின் பிறந்த நாள் விழா­வில் நேற்று முன்­தி­னம் குடும்­பத்­து­டன் கலந்து கொண்டு மகிழ்ந்த ஆற்­காட்­டார் (என் தந்தை) குறித்தும் எப்­போ­தும் எங்­கள் தலை­வர்­களைப் பற்றியும் உள­றும் பா.ஜனதா தலை­வர் தவ றான கருத்தைக் கூறி­ய­தற்கு வேத­னை­யு­டன் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றேன் என்று அவர் ெதரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­றிந்த அண்­ணா­மலை வருத்­தம் தெரி­வித்து பதி­விட்­டார்.

அதில் கூறி­யி­ருப்­ப­தா­வது: உங்­க­ளு­டைய தந்­தை­யார் ஆற்­காட்­டார் நீண்ட ஆயு­ளோடு உங்­கள் அனை­வ­ரு­டைய அர­வ­ணைப்போடும் நன்றாக வாழ்­வ­தற்கு இறை­வனை வேண்­டு­கி­றேன். நாமக்­கல் பொதுக்­கூட்டத்தில் தவ­று­த­லாக உங்­க­ளு­டைய தந்­தை­யார் இறை­வ­னடி சேர்ந்து இருக்­கின்­றார் என்று சொன்ன கருத்­துக்­காக வருந்­து­கி­றேன் என்று அண்­ணா­மலை தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் இந்­தப் பிரச்­சி­னையை கையில் எடுத்­துக்கொண்ட திமு­க­வி­னர் அண்­ணா­ம­லையை வறுத்து எடுத்துவிட்­ட­னர்.

'முட்­டாள்தன­மான பேச்சு', 'வாய்­தி­றந்­தாலே பொய்­தான்' என திமு­க­வி­னர் சரமாரியாக விமர்­சிக்க தொடங்கிவிட்­ட­னர்.

உடனே பாஜ­க­வி­ன­ரும் அவர்­க­ளுக்­குப் பதி­லடி தந்­த­னர். "தப்பு செய்­தால் மன்­னிப்பு கேட்­ப­வன் மனி­தன். வாழ்க்­கை­யில் தப்­பா­கப் பேசி தாங்­கள் செய்­வது, சொல்­வது எல்­லாம் சரி என்று நினைக்­கும் கூட்­டத்­துக்கு மத்­தி­யில் கறை ­ப­டி­யா­த­வர் அண்­ணா­மலை. தான் சொன்ன தக­வல் தவ­றென்­ற­வு­டன் வருந்­து­கி­றேன் என பதி­ல­ளிக்­கும் பண்பு திமுக தலை­வர்­க­ளுக்கு சுட்டுப் போட்­டா­லும் வராது என்று பாஜ­க­வி­னர் பதி­விட்­டுள்­ள­னர்.