ஈக்­கள் தொல்லை: தம்­ப­தியை வாழ்த்­தி­விட்டு அவ­ச­ர­மாக வெளி­யே­றிய பழ­னி­சாமி

ஈக்­கள் தொல்லை: தம்­ப­தியை வாழ்த்­தி­விட்டு அவ­ச­ர­மாக வெளி­யே­றிய பழ­னி­சாமி

1 mins read
51d88a1b-a280-4454-ac34-0f3f82bfc30b
-

சேலம்: சேலத்­தில் நடை­பெற்ற திரு­மண வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு மண­மக்­களை வாழ்த்­து­வ­தற்­காக வந்­தி­ருந்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி. அப்­போது, வந்த இடத்­தில் ஏரா­ள­மான ஈக்­கள் மொய்த்­த­தால் அவ­சர அவ­ச­ர­மாக தம்­ப­தியை வாழ்த்­தி­விட்டு திரு­மண மண்­ட­பத்தை விட்டு அவர் வெளி­யே­றி­னார்.

சேலம் மாவட்ட அதி­முக பொரு­ளா­ளர் 'பங்க்' வெங்­க­டா­ச­லத்­தின் திரு­மண வர­வேற்பு விழா, ராசி­பு­ரம் அருகே உள்ள தனி­யார் திரு­மண மண்­ட­பத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு நடந்­தது.

விழா­வுக்கு வந்­தி­ருந்த உற­வி­னர்­கள் மண்­ட­பத்­தில் கூட்­டம் கூட்­ட­மாக மொய்த்­துக் கொண் டிருந்த ஈக்­க­ளால் கடும் அவ­திப்­பட்­ட­னர். குறிப்­பாக, விருந்து நடக்­கும் இடங்­களில் எல்­லாம் கும்­பல் கும்­ப­லாக ஈக்­கள் பறந்­தன. மண்­ட­பத்­தில் நிம்­ம­தி­யாக அம­ரக்­கூட முடி­யா­மல் பல­ரும் அல்­லாடினர்.

விழா­வுக்கு வந்­தி­ருந்த அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பழ­னி­சா­மி­யை­யும் ஈக்­கள் கூட்­டம் விட்டு வைக்­க­வில்லை. இத­னால், மண­மக்­களை வாழ்த்­தி­விட்டு, அவர் மண்­ட­பத்தை விட்டு விரை­வாக வெளி­யே­றி­னார்.

இவ­ரைப்­போ­லவே முன்­னாள் அமைச்­சர்­கள் சரோஜா, விஜ­ய­பாஸ்­கர் உள்­ளிட்­டோ­ரும் ஈக்­கள் தொல்­லை­யால் விரை­வாக மண்­ட­பத்­தில் இருந்து வெளி­யே­றி­னார்.

இத­னால், திரு­மண வீட்­டார் மிகுந்த கவ­லைப்­பட்­ட­னர்.

அந்த திரு­மண மண்­ட­பத்­தைச் சுற்றி அதிக அள­வில் கோழிப் பண்­ணை­கள் இருப்­பதே இது­போல் ஈக்­க­ளின் தொல்லை தாங்­க­மு­டி­யா­மல் இருப்­ப­தற்­கான கார­ணம் என்று அப்­ப­குதி மக்­கள் வேதனை தெரி­வித்­த­னர்.