தமி­ழ­கத்­தில் கிரு­மிப்­ப­ர­வல் அதி­க­ரிப்பு; 100,000 இடங்­களில் தடுப்­பூசி போடும் பணி துரிதம் முதல்­வர்: முகக்­க­வ­சம் கட்­டா­யம்

தமி­ழ­கத்­தில் கிரு­மிப்­ப­ர­வல் அதி­க­ரிப்பு; 100,000 இடங்­களில் தடுப்­பூசி போடும் பணி துரிதம் முதல்­வர்: முகக்­க­வ­சம் கட்­டா­யம்

2 mins read
376e8cc0-ee92-4a26-9e87-cb8882214403
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொவிட் -19 கிரு­மிப் பர­வல் மெல்ல மெல்ல அதி­க­ரித்து வரும் சூழ­லில், இத்­தொற்­றில் இருந்து பாது­காத்துக் கொள்ளும் வகை­யில் பொது­மக்­கள் முகக்­க­வ­சம் அணிந்து கொள் வது அவசியம் என முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அறி­வு­றுத்தி உள்­ளார்.

கூட்­டம் அதி­கம் உள்ள இடங் களில் சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­று­வ­தும் கைகளை அடிக்­கடி கழுவி சுத்­த­மாக வைத்­துக்­கொள் வதும் முக்­கி­யம் என்­றும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

போதிய அளவு பரி­சோ­த­னை­கள், தொடா் கண்­கா­ணிப்பு, பாதிக்­பட்­டோ­ருக்கு சிகிச்சை வச­தி­கள், தடுப்­பூசி ஆகி­ய­வற்றை முறை­யாகப் பின்பற்றும் வகையில் பொது­மக்­களி­டையே விழிப்­பு­ணா்வை ஏற்­படுத்தவேண்­டும் என அரசு உயர் அதி­காரிகளை முதல்­வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

"பணிபுரியும் இடங்­கள், திரு­­விழாக்­கள், திரு­ம­ணங்­கள், கூட்­டங்­கள் உள்ளிட்ட நிகழ்வு­களில் கலந்து­கொள்வோரில் ஒரு ­சிலா் தொற்­றால் பாதிக்­கப்­பட்டாலும் கூட அவா்கள் அனை­வ­ரை­யும் பரி­சோ­தித்து, தொடா் கண்­காணிப்­புக்கு உட்­ப­டுத்­த­வேண்­டும். பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உரிய சிகிச்­சை­களை­யும் அளிக்­க­வேண்­டும்.

"கொரோ­னாவை வெல்­லும் ஒரே ஆயு­தம் தடுப்­பூசி என்­ப­தால் அதன் முக்­கி­யத்­து­வம் குறித்த விழிப்­புணா்வை பொது­மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­த­வேண்­டும். அதன் நன்­மையை உணர்ந்து, அனை­வ­ரும் தயக்கமின்றி தடுப்­பூசி போட்­டுக் கொள்ள வேண்­டும்," என முதல்வா் அறி­வு­றுத்­தி­யுள்ளாா்.

இதனிடையே, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால், மாண­வர்­கள் முகக்­க­வ­சம் கட்­டா­யமாக அணிந்து வர வேண்­டும் என பெற்­றோர்க்கு பள்ளிக் கல்வித் துறை குறுந்­த­க­வல்­களை அனுப்­பியுள்ளது.

லட்­சம் இடங்­களில் தடுப்­பூசி போடும் பணி

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 தடுப்­பூசி போடா­த­வர்­க­ளின் எண்­ணிக்கை கணக்­கெ­டுக்­கப்­பட்டு, அவர்­க­ளுக்குத் தடுப்­பூசி போட உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யம் தெரி­வித்­துள்ளார். கிருமிப் பரவல் மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்ள நிலை­யில், மாநிலம் முழுவதும் நேற்று ஒரு லட்­சம் இடங்­களில் கொரோனா தடுப்­பூசி முகாம் நடைெபற்றது.

அண்டை மாநி­லங்­களில் இருந்து தமி­ழ­கத்­துக்குப் படிக்க வரும் மாண­வர்­க­ளால் தமி­ழ­கத்­தில் கிரு­மிப்பரவல் சற்று அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ள­தா­கக் கூறி­ய­ அமைச்சர், தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்தில் 217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 88வது நாளாக கொரோனா உயி­ரி­ழப்பு எது­வும் பதி­வா­க­வில்லை. தமி­ழ­கத்­தில் இது­வரை 93.87 விழுக்­காட்­டி­னர் முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 83.07 விழுக்­ காட்­டி­னர் இரண்­டாம் தவணை தடுப்­பூ­சி­யும் போட்டுள்ளதாக தமி­ழக அர­சின் செய்­தி­க்குறிப்பு விவரம் தெரிவித்துள்­ளது.