200 மாட்டு வண்­டி­களில் திருவரங்­கம் கோயி­லுக்கு வருகை அளித்த கிராம மக்­கள்

200 மாட்டு வண்­டி­களில் திருவரங்­கம் கோயி­லுக்கு வருகை அளித்த கிராம மக்­கள்

2 mins read
7aaf8642-9685-4900-915b-fc47c97fbea9
அடுத்­த­டுத்து பூட்­டப்­பட்ட 200 வண்­டி­களில் காளை­க­ளின் ஜல்­ஜல் சத்­தம் ஒலிக்க திருவரங்­கம் கோயி­லுக்கு குடும்­பம் குடும்­ப­மாக வருகை தந்த கரூர், திருச்சி மாவட்ட கிராம மக்­கள். படம்: ஊடகம் -

திருச்சி: கரூர், திருச்சி ஆகிய மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த ஏறக் குறைய 1,500 பேர், 200 மாட்டு வண்­டி­களில் ஆன்­மிகப் பய­ண­மாக திருவரங்­கத்­திற்கு வந்­த­னர்.

கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தங்­க­ளது குல­தெய்­வ­மான திருச்சி, திருவரங்­கம் அருள்­மிகு ரங்­க­நாத சுவா­மியை தரி­சித்து அவர்­கள் வழி­பட்­ட­னர்.

இதன் தொடர்ச்­சி­யாக, நேற்று ஞாயி­றன்று அவர்­கள் கொள்­ளி­டம் ஆற்­றங்­க­ரை­யில் குழந்­தை­கள், பெரி­ய­வர்­க­ளுக்கு முடி­கா­ணிக்கை செலுத்­தி­னர்.

அதன்­பின்­னர், ஸ்ரீரெங்­க­நா­தர் கோவி­லில் தங்­க­ளது உண்­டி­யல் காணிக்­கை­யைச் செலுத்­தி­விட்டு குழந்­தை­க­ளுக்கு காது குத்­தும் வைப­வத்தை நடத்தி, அன்­ன­தானம் வழங்­கி­னர்.

கரூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த கார­ணம்­பட்டி, கீழ­வெ­ளி­யூர், கள்­ளுப்­பட்டி, ராக்­கம்­பட்டி, தொரைக் கலாம்­பட்டி, டி.மேலப்­பட்டி, புதுப்­பட்டி, சங்­கா­யிப்­பட்டி, திருச்சி மாவட்­டம், காவல்­கா­ரன்­பட்டி உள்­ளிட்ட கிரா­மங்­க­ளைச் சேர்ந்த ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­தி­னர், 200 மாட்டு­வண்­டி­கள், டிராக்­டர், வேன் உள்­ளிட்ட மொத்­தம் 300 வாக­னங்­களில் திருவரங்கம் ரெங்­க­நா­தரை வழி­பட வந்­த­னர்.

கடந்த நான்கு தலை­மு­றை­யா­கவே இவர்­கள் குடும்­பம் குடும்­ப­மாக இது­போல் மாட்­டு­வண்­டி­யில் வந்து வழி­பட்­டுச் செல்­கின்­ற­னர்.

ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை வழி­பாடு நடத்­து­வது இவர்­க­ளது வழக்­கம் என்­றா­லும், ெகாரோனா ஊர­டங்கு கார­ண­மாக வழி­பாட்­டில் தடை ஏற்­பட்­டுப் போன­தால் இப் போது மீண்­டும் அவர்­கள் தங்­க­ளது வழி­பாட்டை ஏழு ஆண்­டு­கள் கழித்து தொடங்கி உள்­ள­னர்.

கார்­கள் முதல் விமா­னங்­கள் வரை போக்­கு­வ­ரத்­துத்­துறை நவீன முன்­னேற்­றம் அடைந்து வரும் சூழ­லில், இன்­ற­ள­வும் பழமை மாறா­மல் ஜல்­ஜல் சத்­தத்­து­டன் மாட்டு வண்டி­யில் கிரா­ம­ மக்­க­ளின் பய­ணம் தொடர்­வதை பொது­மக்­களும் குழந்­தை­களும் சாலை­யோ­ர­மாக நின்று வியப்­பு­டன் ரசித்­த­னர்.