தங்கை நினை­வாக சொந்த வீடு சிறப்புப் பள்ளியானது

தங்கை நினை­வாக சொந்த வீடு சிறப்புப் பள்ளியானது

1 mins read
cc2a2987-f26e-411d-b396-d5c98897c96a
-

தூத்­துக்­குடி: தூத்­துக்­குடி மாவட்­டம், விளாத்­தி­கு­ளம் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான தனேஷ் கன­க­ராஜ். இவர், தசை­நார் சிதைவு குறை­பட்­டால் கடந்த ஜன வரி மாதம் மரணமடைந்த தனது தங்­கை கவிதா­வின் நினை­வாக, தான் குடியிருந்த வீட்டை மாற்­றுத் திற­னா­ளி­களுக்­கான இல­வச சிகிச்சை வசதி­யு­டன் கூடிய சிறப்­புப் பள்­ளி­யாக மாற்­றிக் கொடுத் துள்ளார்.

இந்த சிறப்­புப் பள்­ளியை தூத்­துக்­குடி மாவட்ட ஆட்­சி­யர் செந்­தில்­ராஜ், விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மார்க்­கண்­டே­யன் ஆகி­யோர் திறந்து வைத்­த­னர்.

"போதிய தசை­நார் சிதைவு சிகிச்­சை­யும் விழிப்­பு­ணர்­வும் இன்றி என் தங்கைபோல் இனியும் எவ­ரும் உயி­ரி­ழக்­கக் கூடாது என்­ப­தால், எனது வீட்­டை சிறப்புப் பள்­ளி­யாக மாற்றிக் கொடுத்துள்ளேன்," எனக் கூறியுள்ளார் தனேஷ் கன­க­ராஜ்.