ரயில் பய­ணிக்கு ரூ.50,000 இழப்­பீடு வழங்க உத்­த­ரவு

ரயில் பய­ணிக்கு ரூ.50,000 இழப்­பீடு வழங்க உத்­த­ரவு

1 mins read
33c593ac-b401-4d94-84d1-88bc51775274
-

கோவை­: தனது ரயில் பய­ணத்­தின்­போது உரிய இருக்கை வசதி செய்து கொடுக்­க­வில்லை என்று குற்­றஞ்­சாட்­டிய பய­ணிக்கு ரூ.50,000 இழப்­பீடு வழங்­கும்­படி தெற்கு ரயில்­வேக்கு மாநில நுகர்­வோர் ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

பய­ணி­க­ளின் டிக்­கெட்­டு­களைப் பரி­சோ­திக்­கும் டிக்­கெட் பரி­சோ­த­கர் ஒரு­வர்­மீது, ரயில் பய­ணி­களை மரி­யா­தை­யின்றி தரக்­கு­றை­வா­கத் திட்டி, மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­தி­ய­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

இது­தொ­டர்­பான வழக்­கில், பாதிப்புக்கு ஆளான பய­ணிக்கு ரூ.50,000 இழப்­பீடு வழங்­கும்­படி உத்­த­ர­விடப்பட்­டுள்­ளது.

கோவை­யில் நீதித்­துறை அலு­வ­ல­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் சந்­தி­ர­சே­க­ரன். இவர், மாநில நுகர்­வோர் ஆணையத்­தில் அளித்­துள்ள புகார் மனுவில், கடந்த 2014ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கோவை-சென்­னைக்கு இடை­யிலான ரயில் பய­ணத்­தின்­போது தனக்கான இருக்கை ஒதுக்­கி­ய­தில் குள­று­படி ஏற்­பட்­ட­தா­க­வும் அது­கு­றித்து டிக்கெட் பரி­சோ­த­க­ரி­டம் கேட்­ட­போது, தகாத வார்த்­தை­க­ளால் அவர் திட்­டி­ய­தா­க­வும் இத­னால் மூத்த குடி­மக்­க­ளான தனது பெற்­றோ­ரும் குழந்­தை களும் மிகுந்த சிர­மத்­திற்கு ஆளா ன­தா­க­வும் தெரிவித்திருந்தார்.

ரயில்வே நிர்­வா­கத்­தின் அலட்­சி­யப்­போக்கு, டிக்­கெட் பரிசோதக­ரின் நடத்­தை­யால் மன உளைச்­ச­லுக்கு ஆளா­ன­தாகவும் இதற்கு நஷ்டஈடாக ரூ.25 லட்ச ரூபாய் வழங்­க­வேண்­டும் எனவும் கோரி இருந்தார்.

தன்­னைப் போல 70க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் புகார் மனுவில் குறிப்­பிட்டிருந்தார்.

இந்நிலையில், மனுவை விசா­ரித்த ஆணை­யம், மனு­தா­ர­ரின் மன உளைச்­ச­லுக்கு நஷ்­ட­ஈ­டாக ரூ.50,000 வழங்­க­வும் வழக்கு செல­வுத் தொகை­யாக ரூ.10,000 வழங்­க­வும் ரயில்வே நிர்­வா­கத்­திற்கு உத்­த­ரவிட்டுள்ளது.