உரியவரிடம் 16 பவுன் நகையை ஒப்படைத்த இளையருக்கு பாராட்டு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தனது கடையின் வாசல் படிக்கட்டில் கிடந்த பதினாறரை பவுன் தங்க நகைகளைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர் முகம்மது இப்ராஹிமை காவலர்கள் பாராட்டினர். விசாரணையில், நகைப் பையைத் தவறவிட்டது போரிவயல் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பது தெரியவந்ததை அடுத்து நகைப் பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதிமுகவில் இணையமாட்டோம்
சிவகாசி: சிவகாசியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசியபோது, "ஜெயலலிதாவின் கொள்கைப்படி நடக்கும் ஒரே இயக்கம் அமமுக மட்டும்தான். நான் அட்டைக்கத்தி வீசுபவன் இல்லை. ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் படித்தவன். எடப்பாடி பழனிசாமி வியாபார நோக்கத்தில் செயல்பட்டதால்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது. தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒரு போதும் இணையமாட்டோம். மக்களாட்சியின்படி அதிமுகவை மீட்டு எடுப்போம்," என்றார்.
ஜெ.ராதாகிருஷ்ணன் பணி மாற்றம்
சென்னை: மாநிலம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புச் செயலராக மாற்றப்பட்டுள்ள நிலையில், மருத்துவத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
'குழந்தைகளைப் பணியில் அமர்த்துவது சமூகக் குற்றம்'
சென்னை: குழந்தைகளைப் பணியில் அமா்த்தி, அவர்களது எதிர்காலத்தை பாழாக்குபவர்கள் குறித்து பொதுமக்கள் அரசுக்குத் தகவல் ெதரிவிக்கவேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் சம்பாதிக்கும் சொற்பத் தொகைக்காக ஆசைப்பட்டு, வேலைக்கு அனுப்பி அவர்களது பொன்னான எதிா்காலத்தை பாழ்படுத்துவது சமூகக் குற்றமாகும் எனவும் அவர் ெதரிவித்துள்ளார்.

