விசாரணைக் கைதி மரணம்; ஐந்து காவலர்கள் பணி இடைநீக்கம்

விசாரணைக் கைதி மரணம்; ஐந்து காவலர்கள் பணி இடைநீக்கம்

2 mins read
30d99d7b-87a1-4436-9d6a-9cbd287c56fa
உயிரிழந்த கைதி ராஜசேகர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை கொடுங் கையூர் காவல்­நி­லை­யத்­தில் விசா­ரணைக் கைதி ஒரு­வர் சந்­தே­­கப்­படும் வகை­யில் உயி­ரி­ழந்­தது தொடர்­பில், காவல் ஆய்­வா­ளர் உள்­பட ஐந்து காவலர்­கள் பணி இடை­நீக்­கம் செய்­யப்பட்­டுள்­ள­னர்.

இந்தச் சம்பவம் குறித்த விசா­ர­ணையை சிபி­சி­ஐடி காவ­லர்­களிடம் ஒப்­ப­டைத்து காவல்­துறைத் தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு உத்­தரவிட்­டுள்­ளார்.

ஐந்து காவ­லர்­களும் கெல்­லீஸ் சிறார் நீதி­மன்ற நீதிபதி லட்­சுமி முன்பு நேற்று முன்­னி­லை­யா­ன நிலையில், விசா­ரணை நடந்தது.

சென்னை செங்­குன்­றத்தை அடுத்த அல­மாதி கிரா­மத்­தைச் சேர்ந்­தவர்­ ராஜ­சே­கர், 31. இவரை, ஒரு திருட்டு தொடர்­பாக கொடுங்­கை­யூர் காவல்நிலைய காவ­லர்­கள் அழைத்­துச்சென்று விசா­ரித்­துள்­ள­னர். அப்­போது, அவ­ருக்கு உடல் நலமில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, அவரை அரு­கில் உள்ள தனியார் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச்சென்­று காவலர்கள் பரிசோதித்தபோது, ராஜ­சே­கர் ஏற்­கெ­னவே இறந்­து­விட்­ட­தாக மருத்து வர்கள் கூறியுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், "காவல்­து­றை­யினர் தாக்­கி­ய­தால்­தான் என் மகன் உயிரிழந்துவிட்டான். அவனுக்கு எந்த நோயும் இல்லை. வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக காவ லர்கள் பொய் சொல்கிறார்கள். அவ னது சாவுக்கு நீதி கிடைக்கும்வரை சடலத்தை வாங்கமாட்டேன்," என கூறியுள்ளார் ராஜசேகர் தாயார்.

இதுகுறித்து சென்னை கூடு­தல் ஆணையர் அன்பு கூறுகையில், "உயி­ரி­ழந்த கைதி­ ராஜ­சே­கர் மீது ஏற்­கெனவே 27 குற்ற வழக்­கு­கள் இருந்தன. விசா­ர­ணை­யின்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்­தம் ஏற்­பட்டு மயங்கி விழுந்­துள்­ளார். அவரது மர­ணம் தொடர்­பாக நீதித்­துறை நடு­வர் விசா­ரிப்­பார். இச்சம்பவம் தொடர்பில் கொடுங்கை யூர் காவல் ஆய்­வா­ளர் ஜார்ஜ் மில்­லர், உதவி ஆய்­வா­ளர் கன்னியப்பன், தலை­மைக் காவ­லர்­கள் ஜெய­சேகர், மணி­வண்­ணன், சத்­தி­ய­மூர்த்தி ஆகி­யோர் பணி இடை­நீக்­கம் செய்­யப்­பட்டுள்ளனர்," என்றார்.

இதனிடையே, திமுக ஆட்­சி­யில் சிறை மர­ணங்­கள் தொடர்கதை­யாகி வரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டி­யுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி, இதுகுறித்து உயர் நீதி­மன்ற நீதி­பதி தலை­மை­யில் விசா­ரணை நடத்தி நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"இது­போன்ற சம்­ப­வங்­கள் நடக்­கும்­போ­தெல்­லாம் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்; இனி இப்படி நடக்­கா­து என்று முதல்­வர் சொல்வ தெல்­லாம் வெறும் கண்­து­டைப்­பு­தான் என மக்­களை நினைக்க வைத்­துள்ளது இந்த மர­ணங்கள்," என்று அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­கரன் சாடியுள்ளார்.