பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகை

பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகை

1 mins read
7f7b7b1d-ad27-48f5-8c66-2f05c1f905d8
-

கோயம்­புத்­தூர்: கோயம்­புத்­தூ­ரில் உள்ள ஒரு தொடக்­கப்­பள்­ளி­யில் 15 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் நிலையில், இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக் கையை அதி­க­ரிக்­கும் நோக்­கில் பரி­சுத்­தொகை திட்­டத்தை அப்­பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­யர் லட்­சு­ம­ண­சா­மி­ அறி­வித்­துள்­ளார்.

கோவை, மேட்டு லட்­சு­மி­நா­யக்­கன்­பா­ளை­யத்­தில் 1952ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 15 மாணவ-மாண­வி­கள் மட்­டுமே தற்போது பயின்று வரு­கின்­றனா்.

இந்­தப் பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­ய­ராக லட்­சு­ம­ண­சா­மி­யும், ஆசி­ரி­ய­ராக வைர­வ­பாண்டியும் பணி­யாற்றி வரு­கின்­றனா்.

இந்நிலையில், தங்கள் பள்ளியில் படிக்கும் மாண­வா்­கள் எண்­ணிக் கையை அதி­க­ரிக்க ரூ.1,000 பரி­சுத்­தொகை திட்­டத்தை லட்­சு­ம­ண­சாமி அறிவித்துள்ளார். 2022-2023ஆம் கல்­வி­யாண்­டில் சேரும் மாண­வா்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ரூ.1,000 பரி­ச­ளிப்­ப­தாக துண்­டுப் பிர­சு­ரம் விநி­யோ­கித்து வரு­ம் இவர், மாண­வா்­கள் எவ்வளவு பேர் சோ்ந் ­தாலும் ரூ.1,000 வழங்­கப்­படும் என்றும் தெரி­வித்­துள்­ளார்.