ஸ்டாலின்: கல்வியால்தான் வாழ்க்கைத் தரம் முன்னேறும்

ஸ்டாலின்: கல்வியால்தான் வாழ்க்கைத் தரம் முன்னேறும்

2 mins read
456f1c32-86a6-4fe6-9f33-298449c54144
திருவள்ளூரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை முதல்வர் கவனித்தார். பள்ளியில் சமையலறை உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தார். படம்: ஊடகம் -

'கல்வி தாகத்தை தீர்க்கவே எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது'

சென்னை: தண்ணீர் எப்­படி தாகத்தை போக்கு­கி­றதோ, அதே போல் கல்வி தாகத்தை, அறிவு தாகத்தை தீர்க்கக்கூடிய வகை­யில் 'எண்­ணும் எழுத்­தும்' என்ற திட்­டம் தமி­ழக அர­சால் தொடங்­கப்­ப­டுவ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் இத்­திட்­டத்தை தொடங்கி வைத்­துப் பேசிய அவர், ஒவ்­வொரு குழந்­தை­யும் கற்­றல் திறனை மேம்­ப­டுத்­திக்கொள்­ளும் வகை­யில் இந்­தப் புதிய திட்­டம் உரு­வாக்­கப் பட்­டுள்­ளது என்­றார்.

இத்­திட்­டத்­தின் கீழ் வரும் பாடங்­கள் அனைத்­தும் ஆடல், பாடல், கதை­யாக சொல்­லு­தல், நடித்துக் காட்­டு­தல், பொம்­ம­லாட்­டம், கைவினைப் பொருள்­கள் எனப் பல்­வேறு வடி­வங்­களில் பயிற்­று­விக்­கப்­படும் என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

"கல்வி மட்­டும்­தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்­றும். கல்வி உரிமை என்­பது நாம் போரா­டிப் பெற்­றது. எனவே, கல்­வி­யின் மீதான ஈடு­பாட்டை வளர்த்­துக் கொள்ள வேண்­டும்.

"படிக்­கா­மல் சாதித்த ஒரு­வரை யாரா­வது எடுத்­துக்­காட்­டாக காட்­டி­னால், அதற்கு இணை­யாக படித்து சாதித்த லட்­சம் பேரை நாம் காட்ட முடி­யும். படிக்­கா­மல் சாதிக்­க­லாம் என்று யாரா­வது சொன்­னால், அது தன்­னம்­பிக்கை ஊட்­டு­வது அல்ல. வெறும் ஆசை வார்த்­தை­கள்­தான். தவ­றான பாதையை கைகாட்­டும் சூழ்ச்சி அது," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

தமி­ழக அர­சின் 'இல்­லம் தேடி கல்வி' திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக தொடர் வாசிப்பு இயக்­கம் கடந்த 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடத்­தப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், கூகல் நிறு­வன செயலி மூலம் நடந்த இவ்­வி­யக்­கத்­தில் தமி­ழக அர­சுப் பள்ளி குழந்­தைகள் தமிழிலும் ஆங்­கி­லத்­தி­லும் 200 கோடி சொற்­களை வாசித்த­தா­கத் தெரி­வித்­தார்.

"14 லட்­சம் மாண­வர்­கள் பங்­கேற்ற இச்­சா­த­னை­யில் 81.04 லட்­சம் கதை­கள், 7.04 லட்­சம் மணி நேரத்­தில் வாசிக்­கப்­பட்­டுள்­ளன. உல­கி­லேயே 'ரீட் அலௌட்' செய­லி­யில் இது­வரை இவ்­வ­ளவு பெரிய சாதனை நிகழ்த்­தப்­பட்­ட­தில்லை," என்றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.