மூத்த முற்போக்கு எழுத்தாளர் சின்னப்ப பாரதி காலமானார்

மூத்த முற்போக்கு எழுத்தாளர் சின்னப்ப பாரதி காலமானார்

1 mins read
158769ed-e266-4463-ba9d-c4027ae9c981
சின்னப்ப பாரதி. படம்: ஊடகம் -

நாமக்­கல்: மூத்த முற்­போக்கு எழுத்­தா­ளர் கு.சின்­னப்ப பாரதி தமது 88வது வய­தில் கால­மா­னார்.

நாமக்­கல்­லைச் சேர்ந்த அவர் தாகம், சர்க்­கரை, பவ­ளாயி, தலை­முறை மாற்­றம், சுரங்­கம், பாலை நில ரோஜா ஆகிய நாவல்­களை எழு­தி­யுள்­ளார்.

சின்­னப்ப பார­தி­யின் நாவல்­கள் ஆங்­கி­லம், பிரெஞ்ச், டேனிஷ், சிங்­க­ளம், கன்­ன­டம், தெலுங்கு, குஜ­ராத்தி என இந்­திய, வெளி­நாட்டு மொழி­களில் மொழி பெயர்க்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், சுரங்­கத் தொழி­லா­ளர்­க­ளின் சமூக வாழ்வை துல்­லி­ய­மாக பிர­தி­ப­லித்­த­வர் சின்­னப்ப பாரதி என்று இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் முத்­த­ர­சன் புக­ழஞ்­சலி செலுத்­தி­யுள்­ளார்.

அவர் வெளி­யிட்ட இரங்­கல் அறிக்­கை­யில், விவ­சா­யக் குடும்­பத்­தில் பிறந்த சின்­னப்­பா­ரதி சமூக சீர்­தி­ருத்­தங்­களில் முனைப்பு காட்­டி­ய­வர் என்­றும் பகுத்­த­றிவு சார்ந்த அறி­வி­யல் கருத்­துகளை முன்­னெ­டுத்து வந்­த­வர் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

"முது­மையை எட்­டிய நிலை­யில் கு.சின்­னப்ப பாரதி 'இலக்­கிய கருத்­த­ரங்கு நினைவு அறக்­கட்­டளை' அமைத்து புதிய படைப்­பா­ளி­களை ஊக்­கப்­ப­டுத்தி வந்­த­வர். அவ­ரது இலக்­கி­யப் பணி பல விரு­து­களை வென்று, பாராட்­டு­களைப் பெற்­றுள்­ளது. சமூ­கத்தை உள்­வாங்கி, பிர­தி­ப­லித்து அதன் எதிர்­கால பய­ணத்­திற்கு சரி­யான திசை­வழி காட்­டும் படைப்­பா­ளியை இலக்­கிய உல­கம் இழந்­து­விட்­டது," என்று முத்­த­ர­சன் தெரி­வித்­துள்­ளார்.