சென்னை: அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒற்றைத் தலைமையைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஒற்றைத் தலைமையை வழங்கப் போவது யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும் என்றார் அவர்.
"சென்னையில் நடைபெற்ற கூட்டம் வெறும் கருத்துப் பரிமாற்றத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சிக்கு தொடர்பில்லாத சசிகலா குறித்து விவாதித்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். அதிமுகவுக்கு அழிவு என்பது கிடையாது," என்றார் ஜெயக்குமார்.

