சென்னை: எந்தவொரு சமூகத்தைப் பற்றியும் தவறாகப் பேச ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள்தான் என்றும் அவதூறு வழக்கு ஒன்றை விசாரித்தபோது அவர் குறிப்பிட்டார்.
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசி சமூக ஊடகங்களில் காணொளிப்பதிவு ஒன்றை வெளியிட்டதாக எழுந்த புகாரின் பேரில் அவர் மீதும் அவரது நண்பர் சாம் அபிஷேக் என்பவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது.
பின்னர் கடந்த ஆண்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சாம் அபிஷேக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் சமமானவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

