விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட மூவர் பலி

விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட மூவர் பலி

1 mins read
9dd6d23b-661b-4242-baf1-e8df46605cf5
-

தூத்­துக்­குடி: கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் நாகர்­கோ­வி­லில் இருந்து தனி­யார் ஆம்னி பேருந்து 30க்கும் மேற்­பட்ட பய­ணி­க­ளு­டன் செவ்­வாய்க்­கி­ழமை இரவு சென்­னைக்கு சென்றுகொண்­டி­ருந்­தது.

தூத்­துக்­குடி மாவட்­டம், கயத்­தாறு அருகே வந்­த­போது ஆம்னி பேருந்­தின் முன்­பக்க டயர் வெடித்­த­தில் திடீ­ரென நிலை குலைந்த பேருந்து சாலை­யின் நடுவே உள்ள தடுப்பு சுவ­ரில் மோதி சாலை­யில் கவிழ்ந்­தது. இந்த விபத்­தில் ஓட்­டு­நர் உள்­பட 30 பேர் படுகாயம் அைடந்­த­னர்.

கயத்­தாறு காவ­லர்­கள் அனை வரை­யும் மீட்டு நெல்லை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர்.

நாகர்­கோ­வி­லைச் சேர்ந்த புது­மாப்­பிள்­ளை­யான சிவ­ராம், 30, நாகர்­கோ­வி­லைச் சேர்ந்த ஜான்­சன், 50, ராஜ­பா­ளை­யத்தைச் சேர்ந்த ஓட்­டு­நர் பாண்டி செல்­வன் ஆகிய மூவரும் சிகிக்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­னர். இது­கு­றித்து கயத்­தாறு காவலர்கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.