'ரூ.50,000க்கு மேல் தங்கத்துக்கு சுங்க வரி கட்டாயம்'

'ரூ.50,000க்கு மேல் தங்கத்துக்கு சுங்க வரி கட்டாயம்'

2 mins read
d0ba1667-ac70-42b7-9af0-2a39cd2d9c50
-

சென்னை: வெளி­நாட்­டுப் பயணி கள் கொண்டு வரும் தங்­கம், வெள்ளி உள்­ளிட்ட நகை­க­ளின் மதிப்பு 50,000 ரூபாய்க்­கும் மேல் இருந்­தால், அதற்கு அவர்­கள் சுங்­க­வரி செலுத்­த­வேண்­டும் என சென்னை உயர் நீதி­மன்ற நீதி­பதி சர­வ­ணன் தீர்ப்­பில் கூறி­யுள்­ளார்.

அத்­து­டன், ரூ.50,000 மதிப்­பிற்­கும் அதி­க­மான தங்­கம் உள்­ளிட்ட பொருள்­களை இந்­தி­யா­விற்­குள் கொண்டு வரும்­போது அதற்­கான உறு­தி­மொ­ழி­யை­யும் சம்­பந்­தப்­பட்ட வர்­கள் சுங்­கத்­து­றை­யி­டம் அளிக்க வேண்­டும் என்­றும் நீதி­பதி உத்­தர வில் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இலங்­கை­யைச் சேர்ந்த சந்­திர சேக­ரம், விஜ­ய­சுந்­த­ரம், அவ­ரின் மனைவி, குழந்தை உள்­ளிட்ட நால்­வர் சென்­னைக்கு வந்­த­னர்.

ஆன்­மி­கச் சுற்­று­லாப் பய­ணம் மேற்­கொண்டு இந்­தி­யா­வுக்கு வந்த இவர்­கள் 1,594 கிராம் கொண்ட ரூ. 43 லட்­சத்து 90 ஆயி­ரத்து 754 மதிப்­பி­லான தங்க நகை­களை அணிந்­து­கொண்­டும் 112 வெளி நாட்டு மது­பா­னப் போத்­தல்­களை எடுத்­துக்­கொண்­டும் வந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் அவர்­க­ளுக்கு அபரா தம் விதித்த நிலை­யில், இதனை எதிர்த்து சந்­தி­ர­சே­க­ரம், விஜய சுந்­த­ரம், அவ­ரின் மனைவி ஆகிய மூவ­ரும் சென்னை உயர் நீதி மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­த­னர்.

இம்­மனு நீதி­பதி சர­வ­ணன் முன்பு விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது, மனு­தாரர் சார்­பாக முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர், வெளி­நா­டு­களில் இருந்து வருபவர்­கள் தங்­கம், வெள்ளி உள்­ளிட்ட பொருள்­க­ளைக் கொண்­டு­வந்­தால், அதற்கு சுங்­க­வரி செலுத்­தத் தேவையில்லை என 2014ஆம் ஆண்டு கேரள உயர்­நீ­தி­மன்­றம் உத்­தரவிட்­டுள்­ள­தா­க­வும் அதன்­படி தங்­க­ளுக்கு விலக்கு அளித்து அப­ரா­தத்தை ரத்து செய்­ய­வேண்­டும் என­வும் வாதிட்­டார்.

ஆனால், மனு­தா­ரர் தரப்பு வாதங்­களை ஏற்க மறுத்­து­விட்ட நீதி­பதி சர­வ­ணன், 2016ஆம் ஆண்டு புதிய விதி­கள் கொண்டு வரப்­பட்­ட­தா­க­வும் அதன்­படி வெளிநாடு­க­ளி­லிருந்து வரும் நபர்­கள் தங்­கம், வெள்ளி உள்­ளிட்ட நகைகளின் மதிப்பு ரூ.50,000க்கு மேல் இருந்­தால் அதற்கு சுங்­க­வரி செலுத்­த­வேண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

ஆன்­மீகச் சுற்­று­லா­வுக்­காக ஒரு­வர் இந்­தி­யா­வுக்கு வரும்­போது இவ்­வ­ளவு நகை­க­ளை­யும் மது­போத்­தல்­க­ளை­யும் ெகாண்டு வந்­ததை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என­வும் நீதி­பதி கூறி­னார். இந்த அள­வுக்கு எடுத்து வரு­வது வணி­க­ரீ­தி­யாக இருக்­க­லாம் அல்­லது அன்­ப­ளிப்­பாக மற்றவர்­க­ளுக்கு அளிக்­க­லாம் என­வும் நீதி­பதி தீர்ப்பில் கூறியுள்ளார்.