சென்னை: தமிழகம் முழுவதும் எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்த மான நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுக்காலை முதல் திடீர் சோதனையில் இறங்கினர்.
இச்சோதனை குறித்து வெளி யான முதற்கட்ட தகவலின்படி, குழுமத்தின் மீதான வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, திண்டிவனம், காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங் களிலும் எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான நாற்பதுக்கும் மேலான இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சாந்தோம் பகுதியில் வசித்து வரும் எம்ஜிஎம் குழுமத் தலைவரான எம்ஜிஎம் மாறன் எனும் நேசமணி மாறன் முத்துவின் வீட்டிலும் சோதனை நடத்துவதற்காக அதி காரிகள் வந்திருந்தனர்.
ஆனால், மாறன் வெளிநாட்டில் தங்கி இருப்பதாக அதிகாரிகளுக் குத் தகவல் கிடைத்தது.
பூட்டிக் கிடக்கும் வீட்டின் சாவி தங்களிடம் இல்லை என காவ லாளிகளும் கூறிவிட்டனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் செல்ல சாவி இல்லாதால் நீண்ட நேரமாக கார்களிலேயே அமர்ந்திருந்த அதிகாரிகள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதிக்க வும் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கூறின.
சென்னை மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலையில் இயங்கி வரும் எம்ஜிஎம் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் மட்டும் பத்துக்கும் மேலான வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காவலர்களின் பாதுகாப்புடன் நடந்து வரும் இந்தச் சோதனை குறித்த கூடுதல் விவரங்கள் சோத னைக்குப் பின்னர் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை மக்களின் பொழுது போக்குத் தளங்களில் மிகவும் முக் கியமான ஒன்றாக விளங்கும் எம்ஜிஎம் டிஸ்ஸிவேல்ட் பொழுது போக்கு பூங்கா, நட்சத்திர விடுதி கள், மதுபானத் தயாரிப்பு தொழிற் சாலை உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் தொடர்ந்தன.

