தஞ்சாவூர்: சாதி மாற்றி திருமணம் செய்துகொண்ட ஒரு காதல் தம்பதியை தங்களது வீட்டுக்கு வரவேற்று, அவர்களை வெட்டிக் கொன்ற பெண்ணின் அண்ணன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
"சாதி மாறி காதல் திருமணம் செய்பவர்களைக் கொலை செய்வதுதான் கௌரவமா?" என இச்சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் அருகே உள்ள துலுக்க வேலி பகுதியைச் சேர்ந்த சரண்யா வும், 24, திருவண்ணாமலை மாவட்டம், பொன்னுாரைச் சேர்ந்த மோகன், 31, என்பவரும் காதலித்து உள்ளனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண் வீட்டார் அவர்களது காதலை ஏற்கவில்லை. இதனால், கடந்தவாரம் அவர்கள் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், விருந்து வைப்பதாகக் கூறி மணமக்களை துலுக்கவேலிக்கு வரவழைத்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல், உறவினர் ரஞ்சித் ஆகியோர் நேற்று முன்தினம் தம்பதியை வெட்டிக் கொன்றனர்.

