ஒரே வாரத்தில் 32 கந்துவட்டி குற்றவாளிகள் கைது

ஒரே வாரத்தில் 32 கந்துவட்டி குற்றவாளிகள் கைது

1 mins read
0a37fa03-223a-4b19-8a39-390c4fe459dc
-

சென்னை: கந்து வட்டி கொடு­மை­யால் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் சம்­ப­வங்­க­ளைத் தடுக்க 'ஆபரேஷன் கந்து வட்டி' என்ற ஒரு திட்­டத்­தை அண்மையில் தமிழக காவல்­துறைத் தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு தொடங்கிவைத்­தார்.

கந்­து­வட்டி தொடர்­பான புகார்­களை­யும் நிலு­வை­யில் உள்ள வழக்­கு­க­ளை­யும் உட­ன­டி­யாக விசா­ரிக்­க­வும் அவர் உத்­த­ர­விட்­டார்.

"ஆபரேஷன் கந்து வட்டி' திட்­டம் தொடங்­கப்­பட்டு ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், மீட்­டர் வட்டி, கந்து­வட்டி தொடர்­பாக 124 புகார்­கள் பெறப்­பட்டு உள்ளன. 32 கந்து வட்டி குற்­ற­வா­ளி­கள் கைதாகி உள்­ள­னர். 22 பேரி­டம் இருந்து பூர்த்தி செய்­யப்­ப­டாத காசோ­லை­கள், ரூ.40 லட்­சம் மதிப்­புள்ள புரோ­நோட்­டு­கள், பத்­தி­ரங்­கள் உள்­ளிட்ட ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன," என்று டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­தார்.