27 ஆண்டுகள் கழித்து பள்ளி திறப்பு

27 ஆண்டுகள் கழித்து பள்ளி திறப்பு

1 mins read
e8ccb20f-7b59-4692-8f59-c5c50dcc2672
27 ஆண்டுகளுக்குப் பிறகு 37 மாண­வர்­க­ளு­டன் மீண்­டும் புதுப்­ பொ­லி­வு­டன் செயல்படும் பள்ளிக்கூடம். படம்: தமிழக ஊடகம் -

சிவ­கங்கை: கிராம மக்­க­ளின் ஒற்றுமை, கூட்டுமுயற்­சியின் விளை­வாக கடந்த 27 ஆண்­டு­களாக இழுத்து மூடப்பட்டிருந்த அரணையூர் ஊராட்சி ஒன்­றியத் தொடக்­கப்­பள்ளி மீண்­டும் செயல் படத் தொடங்கியுள்ளது.

இந்தப் பள்­ளியைத் தொடர்ந்து நடத்­து­வ­தற்குத் தேவை­யான கழி­வறை, சுற்­றுச்­சு­வர் மற்றும் மதிய உணவுத் திட்­டத்தைச் செயல்­ப­டுத்த அரசு உதவவேண்­டும் என இப் பகுதி மக்­கள் கோரியுள்ளனர்.

சிவ­கங்கை மாவட்­டம், இளை யான்­குடி அருகே உள்ள அரணை யூரில் 70 ஆண்­டு­கா­ல­மாக செயல்­பட்டு வந்­த ஊராட்சி ஒன்­றிய அர­சுப் பள்ளியில் மாண­வர் சேர்க்கை குறைந்­ததை அடுத்து கடந்த 27 ஆண்­டு­களாக மூடிக் கிடந்தது.

இந்நிலையில், புதி­தாகப் பொறுப்­பேற்றுள்ள ஊராட்சி மன்­றத் தலை­வர் முனீஸ்­வரி கணே­சன், கிராம மக்­க­ளின் ஒத்­து­ழைப்­போடு அதி­கா­ரி­கள், ஆட்­சி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து தங்களது கிரா­மத்­தில் பூட்­டிக் கிடக்­கும் பள்­ளியை மீண்­டும் திறப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­தார்.

ஆனால், பாழ­டைந்த நிலை­யில் இருக்கும் பள்­ளிக்கு அரசால் நிதி உதவி வழங்க இய­லாது என அதி­கா­ரி­கள் தெரி­வித்துவிட்டனர்.

இந்நிலையில், கிரா­மமக்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் கேட்டு ரூ.2 லட்­சம் வரை வசூலித்து பள்ளிக் கட்­ட­டம் புதுப்­பிக்­கப்­பட்­டுள்ளது.