மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உயிரிழந்த தாய், மனைவிக்கு கோயில் கட்டிய ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன், தனது 73வது பிறந்தநாளை அவர்களின் சிலைகளின் முன்பு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சியம்மாள் ஆகியோரை நினைவுகூரும் வகையில், தனது வீட்டின் முன்பு கோயில் கட்டி இருவருக்கும் சிலை வைத்து தினந்தோறும் விளக்கேற்றி, பூசை செய்து வருகிறார் மதன்மோகன்.
இந்நிலையில், தனது தாயும் மனைவியும் உயிரோடிருப்பது போலவே நிைனத்து, அவர்களுக்கு முன்பு கேக் வெட்டி, ஊட்டிவிட்டார். இது பிறந்தநாள் விருந்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்களை நெகிழவைத்தது.