குவைத்தில் தவிக்கும் நூறு கேரளப் பெண்கள்

குவைத்தில் தவிக்கும் நூறு கேரளப் பெண்கள்

2 mins read
8a6e24f3-cbc1-4d6f-b8c0-e598f0a88d8f
-

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த நூறு பெண்கள் குவைத்தில் விற்கப்பட்டதாகவும் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இது தொடர்பாக அப்பெண்களை குவைத்துக்கு அனுப்பி வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

சிறார் பரா­ம­ரிப்பு, மருத்­து­வ­மனைப் பணி என்று பல்­வேறு வேலை வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக கடந்த டிசம்­பர் கேரளா முழு­வ­தும் ஒட்­டப்­பட்­டி­ருந்த சுவ­ரொட்­டி­க­ளைப் பார்த்த ஏரா­ள­மான பெண்­கள், வேலை வாய்ப்பு நிறு­வ­னம் போல் செயல்­பட்ட அந்­தக் கும்­பலை அணு­கி­யுள்­ள­னர்.

ஆனால் குவைத் சென்ற பிறகே அப்­பெண்­க­ளுக்கு தாங்­கள் அனை­வ­ரும் வீட்­டுப் பணிப்­பெண் வேலைக்கு அழைத்து வரப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

அவ்­வாறு பணி­பு­ரிய மறுத்த பெண்­க­ளி­டம், காவல்­து­றை­யில் பொய் புகார் அளித்து, வழக்கு போட்டு சிறை­யில் தள்­ளப்­போ­வ­தாக அந்த மோச­டிக் கும்­பல் மிரட்­டி­யுள்­ளது.

ஆனால் சில பெண்கள் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் குவைத்தில் உள்ள மலையாளிகள் சங்கத்தின் உதவியோடும் நாடு திரும்பியுள்ளனர்.

மற்ற அனைவரும் அங்குள்ள அரபுக் குடும்பங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் பலர் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை பார்ப்பதாகவும் அண்மையில் நாடு திரும்பிய ஒரு பெண் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண் தன் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த பின்னரே ஓர் அரபுக் குடும்பம் அவரை விடுவித்துள்ளது.

"அந்த மோச­டிக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் குவைத் சென்­ற­டைந்­த­துமே, எங்­க­ளின் கடப்­பி­தழ்­களை வாங்­கிக் கொண்­ட­னர். அத­னால் எங்­க­ளால் வெளியே எங்­கும் செல்ல முடி­யாது.

"என் கண­வர் மலை­யாள அமைப்பு ஒன்றை தொடர்பு கொண்டு பேச, அவர்­கள் தலை­யிட்­ட­தன் பேரில் என்­னால் நாடு திரும்ப முடிந்­தது," என பாதிக்­கப்­பட்ட மற்­றொரு பெண் கூறி­ய­தாக நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் இணை­ய­த­ளச் செய்தி தெரி­விக்­கிறது.

புதிய இடம், சூழ்நிலை காரணமாக பல பெண்கள் என்ன செய்வது என்று தவிப்புக்கு ஆளாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

சில பெண்களுக்கு தாங்கள் குவைத்தின் எந்தப் பகுதியில் உள்ளோம் என்பது கூட தெரியவில்லை என்றும் அவர்களின் நிலையை நினைத்தால் மனம் கலங்குகிறது என்றும் தபபி வந்த மற்றொரு பெண் கூறுகிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குவைத்தில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை தேவை என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.