தனக்­குத் தானே கல்­லறை கட்­டிக்­கொண்ட பெண்

தனக்­குத் தானே கல்­லறை கட்­டிக்­கொண்ட பெண்

1 mins read
38383b8a-61d9-4d87-a61d-32ced0a99705
-

தஞ்­சா­வூர்: கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், கொல்­லங்­கோடு அருகே ரோசி, 66, என்­ப­வர் வசித்து வந்­தார். இவ­ருக்கு என உற­வி­னர்­கள் யாரும் இல்லை.

வீட்டு வேலை செய்து வந்த இவர், பின்­னர் 100 நாள் வேலை­யி­லும் சேர்ந்து சம்­பா­தித்­துள்­ளார்.

ஒரு­நாள் கூட விடுப்பு போடா­மல் வேலை செய்து பாராட்­டு­க­ளைப் பெற்­றுள்­ளார்.

இந்த சூழ­லில், "நீ இறந்­தால் உனக்­கென்று யார் இருக்­கி­றார்­கள்?" என்று கேட்டு ரோசியை சிலர் கிண்­டல் செய்­துள்­ள­னர்.

இத­னால் மனம் வேதனை அடைந்த ரோசி, அங்­கி­ருந்த ஊராட்சி ஒன்­றி­யத்­தின் அனு­மதி பெற்று ரூ.50,000 செல­வில் தனக்­கென கல்­லறை கட்டி வைத்­தி­ருந்­தார்.

கல்­ல­றை­யின் பின்­புற வாயில் வழி­யாக உடலை உள்ளே தள்ளி அடக்­கம் செய்­யும் வகை­யில் அந்­தக் கல்­லறை வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், கடந்த ஒரு வார­மாக உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டி­ருந்த ரோசி, வீட்­டில் இறந்து கிடந்­துள்­ளார்.

இது யாருக்­கும் தெரி­யா­த­தால் அழு­கிய நிலை­யில் இருந்த உடலை மீட்டு காவ­லர்­கள் உடல்­கூறு பரி­சோ­த­னைக்கு அனுப்­பி­னர். அவ­ரது கல்­ல­றை­யி­லேயே ரோசி­யின் உடல் அடக்­கம் செய்­யப்­பட்­டது.