'பைக்' வாங்க வந்­த­வர் திரும்பி வரா­மல் பறந்­தார்

'பைக்' வாங்க வந்­த­வர் திரும்பி வரா­மல் பறந்­தார்

1 mins read
5cc8d86e-d688-40a0-8c3e-8cadf1f4bb2b
-

கோவை: நடி­கர் வடி­வே­லு­வின் நகைச்சு­வைக் காட்­சி­போல், வாக­னத்தை வாங்­கிக்கொள்­வ­தாக வந்­த­வர், வாக­னத்தை ஓட்­டிப் பார்த்து­விட்டு பணம் தரு­வ­தா­கக் கூறி வாக­னத்­தோடு தப்­பிச் சென்­றார். சென்­ற­வர் சென்­ற­து­தான். திரும்பி வரவே இல்லை. பைக்கை பறி­கொ­டுத்­த­வர் சூலூர் காவல்­நிலை­யத்­தில் புகார் அளித்­துள்­ளார்.

கோைவ மாவட்­டம், நேரு நக­ரைச் சேர்ந்­த­வர் வினோத் சுந்­தர்.இவர், தமது இரு­சக்­கர வாக­ன­மான பைக்கை விற்­பனை செய்­வ­தாக இணை­யத்­தில் பதி­விட்­டார்.

வாக­னத்தை வாங்­கிக்­கொள்ள பணத்­தோடு வரு­வ­தாக வினோத் திடம் ஒரு­வர் தொலை­பே­சி­யில் பேசி­னார். சூலூர் பள்­ளப்­பா­ளை­யத்­தில் உள்ள அரவை ஆலை அரு­கில் வரும்­படி கூற, நண்­பர் சுந்­த­ரு­டன் வினோத் அங்கு சென்று காத்­தி­ருந்­தார். அப்­போது, பைக்கை வாங்­கு­வ­தா­கக் கூறிய ஆட­வர் அங்கு வந்து பைக்­கின் பதி­வுச் சான்­றி­தழை (ஆர் சி புக்) வாங்­கிப் பார்த்­தார். அதன்­பி­றகு பைக்கை ஓட்­டிப் பார்ப்­ப­தா­கக் கூறி பதி­வுச் சான்­றி­த­ழு­டன் கிளம்­பி­ய­வர் திரும்பி வரவே இல்லை.