திருச்சி: மேகதாது அணை விவகாரம் குறித்து கண்டிப்பாக விவாதிக்கப்படும் என்று காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் தலைவா் எஸ்.கே.ஹல்தா் தெரி வித்துள்ளார்.
இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேகதாது அணையைக் கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்கும் நீரின் அளவு குறைந்துவிடும்.
எனவே, இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடக்கவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது எனவும் தமிழகம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையைப் பார்வையிட்ட ஹல்தா் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பிலிகுண்டுலு, மேட்டூா் அணை, கல்லணை உள்ளிட்ட காவிரி ஆற்றுப் படுகை முழுவதும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம். இதேபோல் கா்நாடகத்திலுள்ள காவிரி படுகையையும் பாா்வையிடுவோம்.
"வரும் 23ஆம் தேதி ஆணை யத்தின் கூட்டம் நடைபெறும்போது, மேகதாது அணை தொடர்பாக கண்டிப்பாக விவாதிக்கப்படும். இதற்கான சட்ட ஆலோசனை கிடைத்துள்ளது," என்றார்.
இதனிடையே, "உச்சநீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது, அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும் விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்ட விரோதமானது. காவிரியின் உரிமையைக் காக்க மாநில அரசு தொடர்ந்து போராடும். காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம்," என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பழமையான கல்லணையை வெள்ளியன்று மாலை பாா்வையிட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் தலைவா் எஸ்.கே. ஹல்தா், ஆணைய உறுப்பினா் நவீன்குமாா் உள்ளிட்டோா்.
படம்: தினமணி ஊடகம்

