சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 498 ஊரக உள்ளாட்சிப் பதவிகள், 12 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள் என மொத்தம் 510 பதவி களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான அறிவிப்பு இன்று 20ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் வேட்புமனுத் தாக்கலும் இன்றே தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜூலை 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஜூலை 12ஆம் தேதி வாக்கு எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக தலைவர்களுக்கு இடையே, நீயா நானா போட்டி எழுந்துள்ளதால், இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

