மருத்­து­வ­ம­னை­களில் 100 படுக்கை தயார்­நிலை

மருத்­து­வ­ம­னை­களில் 100 படுக்கை தயார்­நிலை

1 mins read
d12d869c-8ccb-4020-861d-a9a56e47e33f
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால், மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­கள், மாவட்ட தலைமை மருத்­து­வ­ம­னை­களில் 100 படுக்­கை­க­ளைத் தயார் நிலை­யில் வைத்­தி­ருக்­கும்­படி மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு மருத்­து­வத்­துறை செய­லா­ளர் செந்­தில்­கு­மார் அறி­வு­றுத்தி உள்­ளார்.

லேசான அறி­கு­றி­கள் இருந்­தால் பார­சிட்­ட­மால், சிங்க், வைட்­ட­மின் சி மாத்­தி­ரை­களை வழங்கி தனி­மைப்­ப­டுத்­த­வேண்­டும் என்­றும் வீட்­டுத் தனி­மை­யில் இருப்­ப­வர்­க­ளின் உயிர்­வாயு அளவை ஆக்­சி­மீட்­டர் மூலம் பரி­சோ­திக்­கும்­ப­டி­யும் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

அத்­து­டன், வீட்­டுத் தனி­மை­யில் உள்­ள­வர்­க­ளைத் தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு தின­சரி கண்­கா­ணிக்­க­வேண்­டும் என்­றும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­தல், சமூக இடை­வெளி யைப் பின்­பற்­று­தல் அவ­சி­யம் என் றும் செந்­தில்­கு­மார் கூறி­யுள்­ளார்.

தலை­ந­கர் சென்­னை­யில் மட்­டும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் கொரோனா பாதிப்பு 589ல் இருந்து 596 ஆக அதி­க­ரித் துள்­ளது.

இதன்­மூ­லம் கொரோனா பாதித்­த­வர்­கள் எண்­ணிக்கை 34 லட்­சத்து 60 ஆயி­ரத்து 182 ஆக உயர்ந்­துள்­ளது. கொரோனா பாதிப்­பால் உயி­ரி­ழப்பு இல்லை.