செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
d2bda2c1-3082-49ef-94d6-603ace4f45c1
-

பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

கரூர்: வகுப்பறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தில், இரு ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆங்கில ஆசிரியர் மணிகண்டனுக்கு தலைமை ஆசிரியை சித்ரா பிறந்தநாள் கேக்கை ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

முதல்­மு­றை­யாக வீடு­க­ளுக்கு குழாய் மூலம் சமை­யல் எரி­வாயு

நாகை: தமி­ழ­கத்­தில் முதல்முறை­யாக நாகை மாவட்­டத்­தில் உள்ள வீடுகளுக்கு தனி­யார் நிறு­வனம் ­சார்­பில் குழாய் மூலம் சமை­யல் எரி­வாயு விநி­யோ­கிக்கும் திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. இங்குள்ள சீயாத்­த­மங்கை கிர­ாமத்­தில் 14 வீடு­களில் குழாய் வழி எரி­வாயு இணைப்­பு­களை மாவட்ட ஆட்­சி­யர் அருண் தம்­பு­ராஜ் தொடங்கி வைத்­தார். மீட்­டர் கருவி மூலம் இரு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை எரி­வாயு பயன்­பாட்­டைப் பொறுத்து கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­பட உள்ளது.

7,300 பேருந்துகள் இயங்க உத்­த­ரவு

சென்னை: பள்ளி மாண­வர்­கள், பெண்­க­ளின் நலனைக் கருத்­தில்கொண்டு மாநிலம் முழு­வதும் 7,300 அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்­படி, அனைத்து கிளை மேலா­ளர்­க­ளுக்­கும் உத்­த­ர­வி­டப்­பட்டுள்­ளதாக அரசுப் போக்­கு­வ­ரத்­துக் கழக அதி­கா­ரி­கள் கூறி­யுள்ளனர்.