செங்கல்பட்டு: ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த ஐந்து நாள்களாக அதிமுகவில் பரபரப்பான காட்சிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், யாருக்கு யார் ஆதரவு, நடுநிலை வகிப்பவர்கள் யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் கிடைத்த தகவல்:
முன்னாள் எம்பி மைத்ரேயன், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்சி சம்பத் ஆகியோர் தற்போதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், அன்பழகன், கருப்பண்ணன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் பொன்னையன், கடம்பூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், வீரமணி, ராஜேந்திர பாலாஜி, வளர்மதி ஆகியோர் பழனிசாமிக்கு ஆதரவாக அணி வகுப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வரை ஓ.எஸ். மணியன் எந்த அணியிலும் இல்லாமல் நடுநிலை வகித்து வருகிறார்.
மாவட்டச் செயலாளர்கள் 75 பேரில் 64 பேர் எடப்பாடி பழனிசாமிக்கும் 11 பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவு நிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது.

