'மத்திய அரசு திட்டங்களை பின்பற்றும் திமுக அரசு'

'மத்திய அரசு திட்டங்களை பின்பற்றும் திமுக அரசு'

1 mins read
2b44f66b-68c5-45f7-9970-1ca3f7a0b881
-

பொள்­ளாச்சி: "மத்­திய அர­சின் திட்­டங்­களை காப்­பி­ய­டித்து, அதற்கு புதிய பெயர் வைப்­ப­தில், திமுக சிறந்து விளங்­கு­கிறது,'' என பார­திய ஜனதா கட்­சி­யின் தமி­ழக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­தார். பொள்­ளாச்­சி­யில் நடந்த கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மாநாட்­டில் கலந்­து­கொண்டு அவர் பேசி­னார். "இல்­லம் தேடி கல்வி திட்­டம் மத்­திய அரசு துவங்கி,800 கோடி மத்­திய அரசு நிதி ஒதுக்கி உள்­ளது. ஆனால் மத்­திய அரசு திட்­டத்­துக்கு திமுக பெயர் வைக்­கிறது. மத்­திய அர­சின் திட்­டங்­களை காப்­பி­ய­டித்து, அதற்கு புதிய பெயர் வைப்­ப­தில் திமுக சிறந்து விளங்­கு­கிறது.

"பிர­த­மர் மோடி கச்­சத்­தீவை மீட்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றார். இதை­ய­றிந்து கச்­சத்­தீவை மீட்­போம் என, திமுக நாட­க­மாடு கிறது. உல­கின் படை­களில் இந்­தியா 3வது இடத்­தில் உள்­ளது. இதை முதல் இடத்­துக்கு கொண்டு வரத்­தான் அக்­னி­பத் திட்­டம். பல பாது­காப்பு படைப் பிரி­வு­களில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கிறது.

"பொள்­ளாச்­சி­யில் இருந்து ஒரு நாளைக்கு 7,000 லோடு மண்ணை ஒரு தனி­யார் நிறு­வ­னம் கேர­ளா­வுக்கு கடத்­து­கிறது," என்றும் அண்­ணா­மலை தெரி­வித்­தார்.