சென்னை: அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பக்கமோ, எடப்பாடி பழனிசாமி பக்கமோ தான் இல்லை என்று கூறியுள்ளார்.
அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதன் பிறகு கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றொரு பக்கமும் தங்களின் நிலையை வலுப்படுத்தி வருகின்றனர்.
ஜெயக்குமார் வெளிப்படையாக பேசியதால்தான் இந்தப் பிரச்சினை ஆரம்பமானது என்று ஓபிஎஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
வரும் ஜூன் 23ஆம் தேதி வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினரிடைேய மோதல் முற்றியிருக்கிறது.
இதற்கிடையே நேற்று ெஜயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தான் ஒற்றை தலைமை என்று மட்டுமே குறிப்பிட்டதாகவும் அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். "ஒற்றை தலைமை விவகாரத்தில் சுமூக முடிவு காணப்படும். நான், பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை, எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை. அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்.
"ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவு முடிவு ெசய்யும். அதிமுகவில் பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டும் எண்ணம் இல்லை," என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதற்கிடையே அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பி.பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில் வரும் 23ஆம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதி முக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதால் காவல்துறை பாதுகாப்பு அவசியம் எனவும் போக்குவரத்தும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.