மதுரை: உலகப் புகழ்ெபற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மருத்து வமனை கட்ட இந்து அறநிலையத் துறை திட்டமிட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் வெளிநாட்டவர்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர்.
சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர் களில் சிலருக்கு மாரடைப்பு, மயக்கம் உட்பட சில உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
இதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் உள்ளது.
இருந்தாலும் முதலுதவி உட்பட விரைந்து சிகிச்சையளிக்க கோயிலிலேயே இந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனை அமைய உள்ளது.
இது குறித்து விளக்கிய கோயில் அதிகாரி ஒருவர், பக்தர்களின் வசதிக்காக மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். இந்த மருத்துவமனையில் இரு மருத்துவர்கள், தாதியர்கள், உதவியாளர்கள் இருப்பார்கள். உடல்நலக்குறைவு ஏற்படும் பக்தர் களுக்கு உடனடியாக மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும். படுக்கை வசதியும் இருக்கும். மேல் சிகிச்சை தேவைப் பட்டால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்," என்றார்.
இதற்கிைடயே மருத்துவமனையில் பணியாற்ற தாதியர்களைச் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் சில நிபந்தனைகளுடன் தாதியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

