தூத்துக்குடி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் ஒரே ஒரு மாணவி நூற்றுக்கு 100 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
"நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் பெறுவது முடியாத காரியம். அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதுதான்," எனக் கூறப்படும் தமிழ்ப் பாடத்தில், ஒன்பது லட்சம் பேரில் தனியொரு மாணவியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார் துர்கா.
சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் துர்கா, விவசாயம் பற்றி படிப்பதே தனது எதிர்கால லட்சியம் என்கிறார்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த திங்களன்று வெளியிடப்பட்டன.
இதில், அதிகபட்சமாக அறிவிய லில் 3,841 மாணவர்களும் கணி தத்தில் 2,186 மாணவர்களும் சமூக அறிவியலில் 1,009 மாணவர்களும் ஆங்கிலத்தில் 45 மாணவர்களும் தமிழ்ப் பாடத்தில் ஒரே ஒரு மாண வியும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கள் பெற்று அசத்தியிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் செல்வகுமாரின் மகள் துர்கா. திருச்ெசந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் படித்தவர்.
இதுகுறித்து ெசய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஆங்கில மொழி வழியில்தான் பாடங்களைப் படித்தேன். எனினும், எனக்குப் பிடித்த பாடம் தமிழ்தான். ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக் குத் தமிழில் அதிக ஈடுபாடு இருக்காது என்று சொல்வார்கள். தமிழ் மீதுள்ள ஆர்வத்தால்தான் நான் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.
"உரைநடையைவிட செய்யுள் கடினம் என மாணவர்கள் நினைக்கின்றனர். சினிமா பாடல்களை மனதில் பதியவைத்து முணுமுணுப்பதைப்போல் செய்யுளில் வரும் மனப்பாடப் பாடல்களையும் மனதில் பதிய வைத்தால்போதும். வெற்றி நிச்சயம்," என்கிறார் துர்கா.

