பிலிப்பீன்ஸ் பெண் மரணம்; கணவரிடம் விசாரணை

பிலிப்பீன்ஸ் பெண் மரணம்; கணவரிடம் விசாரணை

2 mins read
c8d1280b-9878-46b8-ab88-8ea71c175625
மருத்துவர் ஹரிசுடன் ரயில் விபத்தில் உயிரிழந்த பிலிப்பீன்ஸ் பெண் பொறியாளர் ரேச்சல் ஆனி ேமரி.படம்: ஊடகம் -

சேலம்: பிலிப்­பீன்ஸ் நாட்­டைச் சேர்ந்த ரேச்­சல் ஆனி மேரி என்ற பெண் பொறி­யா­ளர் ஒரு­வர், சேலம் அருகே ரயிலில் இருந்து விழுந்து உயி­ரி­ழந்­தார். இதுகுறித்து ரேச்ச லின் கணவரும் மருத்துவருமான ஹரிசிடம் காவல்­துறை­யி­னர் விசா­ரணை நடத்தி வருகின்றனர்.

தர்­ம­புரி ரயில்வே காவல்­து­றை­யி­னர் ரேச்­ச­லின் உடலை மீட்டு உடல்­கூறு பரி­சோ­த­னைக்­காக சேலம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு நேற்று அனுப்பிவைத்­த­னர்.

இச்­சம்­ப­வம் குறித்து பிலிப்­பீன்ஸ் தூத­ர­கத்­திற்­கும் அந்­நாட்­டில் வசிக்­கும் ரேச்­ச­லின் சகோ­த­ரிக்­கும் தக­வல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

கேரள மாநி­லம், எர்­ணா­கு­ளம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஹரிஸ். இவர் கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரு­வில் ஒரு தனி­யார் ஆயுர்­வேத மருத்­துவ நிறு­வ­னத்­தில் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

ரேச்­சல், 35, ஹரிஷ், 48, இரு வரும் கடந்த மூன்­றாண்­டு­களா­க சமூக வலைத்­தளம் மூலம் அறிமு­க­ மாகி காத­லித்து வந்­தனர்்.

இந்நிலையில், கடந்த 10 நாள் ­க­ளுக்கு முன்பு பிலிப்­பீன்­சில் இருந்து பெங்­க­ளூ­ரு வந்த ரேச்­சல், ஹரிசைப் பதி­வுத் திரு­ம­ணம் செய்துகொண்டு பெங்­க­ளூ­ரு­வில் குடும்­பம் நடத்தி வந்­துள்­ளார்.

அதன்­பின்­னர், ஹரி­சின் சொந்த ஊரான எர்­ணா­கு­ளம் செல்ல விரும்­பு­வ­தாக ரேச்சல் தெரி­வித்­தார்.

இதையடுத்து, இரு­வ­ரும் பெங்­க­ளூ­ரில் இருந்து சேலம் வழி­யாக எர்­ணா­கு­ளத்துக்கு விரைவு ரயி­லில் பயணம் செய்தனர்.

சேலம் மாவட்­டம், காரு­வள்ளி அருகே ரயில் வந்த­போது, ரயி­லின் படிக்­கட்­டில் இருந்து திடீ­ரென ேரச்­சல் 50 அடி பள்­ளத்­தில் தவறி விழுந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதைத்­தொ­டர்ந்து, ஹரி­சி­டம் நடத்திய விசா­ர­ணை­யில் சில முக்­கிய தக­வல்­கள் தெரியவந்தன.

மருத்­து­வர் ஹரி­சுக்கு ஏற்­ெகனவே திரு­ம­ண­மாகி மனை­வி­யும் இரு மகள்­களும் உள்­ள­னர். அவர்­கள் எர்­ணா­கு­ளத்­தில் வசித்து வரு­கின்­ற­னர். இதனை அவர் ரேச்­ச­லி­டம் கூறாமல் மறைத்துவிட்டார்.

அத்துடன், தனது குடும்­பத்­தி­ன­ரி­டம் தெரி­விக்­கா­மல் ரேச்சலை ஹரிஷ் ரக­சி­ய­மாக பதிவுத் திரு­மணம் செய்துகொண்­டுள்­ளார்.

ஹரிஷின் முதல் மனை­விக்­கும் பிலிப்­பீன்ஸ் பெண்ணை ஹரிஷ் திரு­ம­ணம் செய்துகொண்­டது தெரி­யாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலை­யில், எர்ணாகுளம் பய ணத்தின்போது திரு­மண வாழ்க்கை பற்றி முதல் மனைவியிடமும் குடும்­பத்­தி­ன­ரி­டமும் எவ்­வாறு தெரி­விப்­பது என்ற குழப்­பத்­தில் இருந்த ஹரிஷ், இரண்டாவது மனைவி ரேச்சலை ரயி­லில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்­தி­ருக்­க­லாம் என்ற கோணத்­தி­ல் காவல்­து­றை­யி­னர் விசாரணை நடத்தி வரு­கின்­ற­னர்.