தமிழைப் பின்னுக்குத் தள்ளிய அரசு என சீமான் குற்றச்சாட்டு

தமிழைப் பின்னுக்குத் தள்ளிய அரசு என சீமான் குற்றச்சாட்டு

1 mins read
59ff9c5c-8f6b-4a34-9b4f-c5be7e27c64b
-

சென்னை: தேர்வு முடி­வு­களில் தமிழை வெறு­மனே மொழிப்­பா­டம் எனக் குறிப்­பிட்­டி­ருப்­பதை ஏற்க இய­லாது என நாம் தமி­ழர் கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் தெரி­வித்­துள்­ளார்.

'எங்­கும் தமிழ், எதி­லும் தமிழ்' எனும் முழக்­கத்தை முன்­வைத்து ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்­துள்ள திரா­விட ஆட்­சி­யா­ளர்­கள், தமிழை வளர்க்­கும் லட்­ச­ணம் இது­தான் என்று தமது டுவிட்­டர் பதி­வில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"பத்து, பன்னி­ரெண்­டாம் வகுப்பு­க­ளுக்­கான பொதுத்­தேர்வு முடி­வு­களை வெளி­யி­டும்­போது பாடங்­களின் பெயர்­களை தமி­ழில் குறிப்­பி­டா­த­தும் தமிழ் மொழிப்­பா­டத்தை வெறு­மனே மொழிப்­பா­ட­ம் என்று மட்டும் பதிவு செய்­தி­ருப்­ப­தும் கண்­ட­னத்­திற்­கு­ரி­யது.

"தமி­ழைப் பின்­னுக்­குத் தள்ளி, ஆங்­கி­லத்தை உயர்த்­திப் பிடிப்­பது­தான் திரா­விட மாடல் ஆட்சி, வெட்கக்­கேடு," என்று காட்­டத்­துடன் குறிப்­பிட்­டுள்­ளார் சீமான்.