60 முட்டைகள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்யும் கர்ப்பிணி

60 முட்டைகள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்யும் கர்ப்பிணி

2 mins read
d0cb450f-136d-438d-9d9b-31611b328972
60 முட்டைகள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிறைமாத கர்ப்பிணி மருத்துவர் பானுப்பிரியா சரத்குமார்.படம்: ஊடகம் -

காஞ்­சி­பு­ரம்: ஒன்­பது மாத நிறை­மாத கர்ப்­பி­ணிப் பெண் மருத்­து­வர் ஒரு­வர் 60 முட்­டை­கள் மீது 80 நொடி­கள் அமர்ந்து கடி­ன­மான ஆச­னத்தை செய்து காட்­டி­யது பொது மக்­க­ளி­டையே வர­வேற்பை பெற்­றுள்­ளது.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், வீர­காளியம்­மன் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஒன்­பது மாத கர்ப்­பி­ணி­யான சித்த மருத்­து­வர் டாக்­டர் பானுப் பிரியா சரத்­கு­மார்.

இவர், தனது ஏழு வயது முதல் யோகா மீது அள­வில்­லாத ஆர்­வம் கொண்டு, அதனை முறை­யா­கப் பயிற்சி பெற்று பல்­வேறு போட்டி களி­லும் கலந்­து­கொண்டு முத லிடத்­தைப் பெற்று பரி­சு­களை மாநில அள­வில் பெற்­றுள்­ளார்.

இவ­ரது திற­மை­யைக் கண்டு மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ ல­லிதா இவ­ருக்கு நினை­வுப் பரிசு வழங்கியுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில், கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற எட்­டா­வது தேசிய யோகா தினத்தை முன்­னிட்டு இவர் மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்­வூட்ட திட்­ட­மிட்­டார்.

தற்­போது இவர், மருத்­து­வர் மற்­றும் பயிற்­சி­யா­ள­ரின் ஆலோச னையின்­படி தனது வீட்­டில் 60 முட்­டை­க­ளின் மீது அமர்ந்து எண்­பது நொடி­கள் பத்­மா­ச­னம் மேற்­கொண்டு யோகா குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னார்.

இது­கு­றித்து மருத்­து­வர் பானுப் பிரியா சரத்­கு­மார் கூறு­கை­யில், கடந்த இரண்­டாண்டு கொவிட்-19 கால­கட்­டத்­தில் மாண­வர்­கள், இளைஞர்­கள் உள்­ளிட்ட பல தரப்­பி­ன­ரும் கைபேசி, கணினி என திசை­மா­றிச் சென்­ற­னர். இக்­கா­ல­கட்­டத்­தில் யோகா பயிற்­சி­களை மேற்­கொண்டு தனது மன அழுத்­தத்­தைக் குறைக்க பயிற்சி மேற்­கொண்டு இருக்­க­லாம்.

தற்­போது யோகா பயிற்சி குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவே தான் ஒன்பது மாத நிறை­மாத கர்ப்­பிணி என்றபோதும், மருத்­து­வர் மற்­றும் பயிற்சியாளரின் ஆலோ­ச­னைப்­படி இந்த நிகழ்வை நடத்­தி­ய­தாக தெரி­வித்­தார்.

பேறு­கா­லத்­தில் மருத்­து­வர்­களின் ஆலோ­ச­னைப்­படி யோகா பயிற்சி மேற்­கொண்டு மன­அ­ழுத்­தம், உடல் நலத்­தைப் பாது­காக்­க­லாம் என ஆலோ­சனை தெரி­வித்­தார். முட்டை மீது ஆச­னப் பயிற்சி செய்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­திய காணொளி தற்­போது இணையத்தில் பரவி வருகிறது.