தேனி: தேனி மாவட்டத்தில் மாயமான பள்ளி மாணவனை நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தமபாளையத்தைச் சேர்ந்த மாதவன், 16, என்ற மாணவன் கடந்த 18ஆம் தேதி நண்பர்களுடன் விளையாடச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
மாணவனைத் தேடி வந்த காவலர்கள், பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர். மாணவனின் நண்பர்களான 17 வயது சிறுவர்கள் இருவரையும் அல்லா பிச்சை என்ற இளைஞரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் கஞ்சா வாங்கிக் கொடுக்கச் சொல்லி மாதவனிடம் ரூ.1,000 கொடுத்ததாகவும் மாதவன் கஞ்சா வாங்கிக் கொடுக்காததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.