சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலை யில், தினசரி பாதிப்பு 1,000ஐ கடந்தது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 292 அதிகம். சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு 500ஐ நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாவட்டத்திலும் இறப்பு பதிவாகவில்லை.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 497 பேருக்கும் செங்கல்பட்டில் 190 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
மாநிலம் முழுவதும் கொரோனாவிற்கு 5,174 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து அலுவலர்களும் முகக் கவசம் கட்டாயம் அணியவேண்டும் என நேற்றுமுதல் (24ஆம் தேதி) அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா என்ற சந்தேகத்திற்கு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
"கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
"மீண்டும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையை கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் ஓமிக்ரான் பி-ஏ-4, பி-ஏ-5 வகை கொரோனா உயிர்க்கொல்லியாக இல்லாமல், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது," என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

