கம்பம்: தனது வார்டில் உள்ள எந்த ஒரு தெருவிலும் குப்பை என்பதே இல்லாத அளவுக்கு சுத்தமாக வைத்துள்ளோம் என்கிறார் சாதிக். அதையும் மீறி, யார் ஒருவர் சிறிய குப்பையைத் தேடி எடுத்தாலும்கூட அவர்களுக்கு ரூ.500 உடனடியாக பரிசாக வழங்கப்படும் என இவர் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் உள்ள 11வது வார்டில் கவுன்சிலராக இருப்பவர் சாதிக், 40. இவர், தனது வார்டில் குப்பை சேகரிப்பு மேலாண்மை பணியினைச் செய்து வருகிறார்.
கழிவுநீர் தேங்கி நிற்காமல் சாக்கடையைத் தூர்வாறுதல், மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பொது இடங்களை சுத்தப்படுத்தும் பல்வேறு பணிகளையும் இவர் செய்து வருகிறார்.
இதுகுறித்து சாதிக் கூறுகையில், "எனது வார்டில் 85 விழுக்காட்டினர் முஸ்லிம் மக்களும் 15 விழுக்காட்டினர் இதர மக்களும் வசிக்கின்றனர்.
"நான் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று தெருவில் குப்பை போடாதீர்கள், துப்புரவுப் பணியாளர்கள் வந்து சேகரித்துக் கொள் வார்கள் என அறிவுறுத்தினேன்.
"அதன்படி எனது வார்டில் உள்ள யாரும் தெருவில் குப்பையைக் கொட்டுவதில்லை. துப்புரவுப் பணியாளர்களும் காலை, மாலை என இருவேளைகளிலும் குப்பையைச் சேகரித்து தெருக்களையும் கூட்டி சுத்தம் செய்கின்றனர். இதனால், எனது வார்டில் உள்ள தெருக்களில் ஒரு குப்பையைக்கூட பார்க்க முடி யாது. அப்படி யாராவது குப்பையை எடுத்தால், எடுத்த இடத்திலேயே 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த அறிவிப்புக்கு வார்டு மக்களும் துப்புரவுப் பணியாளர்களும் தான் காரணம்," என்கிறார்.

