திருச்சி: தனியார் பேருந்தை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி யதாக பாஜக மாநில நிர்வாகி சூர்யா திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனான சூர்யா, கடந்த சில நாள்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 11ஆம் தேதி உளுந்தூர்பேட்ைட அருகே சூர்யாவின் காரும் தனியார் ஆம்னி பேருந்தும் மோதிக்கொண்டன.
இதில், சூர்யாவின் கார் சேதம் அடைந்தது. அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு மிரட்டி, தனியார் ஆம்னி நிறுவனத்தின் ஒரு பேருந்தை சூர்யா கடத்திச் சென்றதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளர் அளித்த புகாரின் பேரில், திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறை யினர் சூர்யாவைக் கைது செய்தனர்.
இதையறிந்த பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேராட்டம் நடத்தினர்.
இருப்பினும் சூர்யாவை விடுவிக்க காவலர்கள் மறுத்துவிட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.

