பேருந்தைக் கடத்திய பாஜக மாநில நிர்வாகி சூர்யா கைது

பேருந்தைக் கடத்திய பாஜக மாநில நிர்வாகி சூர்யா கைது

1 mins read
ce9a9d0e-f211-4b67-8dab-85a72a32f054
-

திருச்சி: தனி­யார் பேருந்தை கடத்­திச் சென்று பணம் கேட்டு மிரட்டி ­ய­தாக பாஜக மாநில நிர்­வாகி சூர்யா திருச்­சி­யில் கைது செய்­யப்­பட்­டார்.

திமுக எம்பி திருச்சி சிவா­வின் மக­னான சூர்யா, கடந்த சில நாள்­க­ளுக்கு முன்பு பாஜ­க­வில் இணைந்­தார். அவ­ருக்கு மாநிலத்தின் இதர பிற்­படுத்தப்பட்டோர் அணி பொதுச் செய­லா­ளர் பதவி வழங்­கப்­பட்­டது.

இத­னி­டையே, கடந்த 11ஆம் தேதி உளுந்­தூர்­பேட்ைட அருகே சூர்­யா­வின் காரும் தனி­யார் ஆம்னி பேருந்­தும் மோதிக்கொண்­டன.

இதில், சூர்­யா­வின் கார் சேதம் அடைந்­தது. அதற்கு ஐந்து லட்­சம் ரூபாய் இழப்­பீடு கேட்டு மிரட்டி, தனி­யார் ஆம்னி நிறு­வ­னத்­தின் ஒரு பேருந்தை சூர்யா கடத்­திச் சென்­ற­தாகப் புகார் எழுந்­தது.

இது­தொ­டர்­பாக ஆம்னி பேருந்து நிறு­வ­னத்­தின் மேலா­ளர் அளித்த புகா­ரின் பேரில், திருச்சி கண்­டோன்­மென்ட் காவல்­துறை யினர் சூர்­யா­வைக் கைது செய்­த­னர்.

இதை­ய­றிந்த பாஜ­க­வி­னர் காவல்­நி­லை­யத்தை முற்­று­கை­யிட்டு காவ­லர்­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்டு பேராட்­டம் நடத்­தி­னர்.

இருப்­பி­னும் சூர்­யாவை விடு­விக்க காவ­லர்­கள் மறுத்துவிட்­டனர்.

இதைத்­தொ­டர்ந்து போராட்­டம் நடத்திய பாஜ­க­வி­னர் கைது செய்­யப்­பட்டு, விடு­விக்­கப்­பட்­ட­னர்.