சென்னை: சென்னை துறைமுகம் காவலர்கள், மண்ணடி அருகே வாகனச் சோதனை நடத்தியபோது, ஆந்திரப் பதிவு எண் கொண்ட காரில் கட்டுக்கட்டாக இரண்டு கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் வந்த இருவரிடம் விசாரித்தபோது, அவர்கள் ஆந்திரா வின் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், நாராயணன் என்பது தெரியவந்தது.
நகை மொத்த வியாபாரம் செய்யும் இருவரும் சௌகார்பேட்டையில் நகை வாங்க வந்ததாகக் கூறினர். இருப்பினும், அவர்களிடம் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. பணத்தையும் பணத்துடன் பிடிபட்ட இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காவலர்கள் ஒப்படைத்தனர். படம்: தமிழக ஊடகம்

