சென்னை: அதிமுக தலைவர்களுக்கு இடையே மோதல் போக்கு முற்றி வரும் நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா வீட்டின் முன்பாக நேற்று திடீரென அதிமுக தொண்டர்கள் திரண்டனர். கைகளில் அதிமுக கொடியைப் பிடித்திருந்த அவர்கள், ஓபிஎஸ்-ஈபிஎஸ்சுக்கு எதிராக முழக்கமிட்டு, கட்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்கும் படி சசிகலாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூடியிருந்த அனைவருமே எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்பதால், ஆளாளுக்கு ஓபிஎஸ்சை துரோகியே வெளியே போ என்று வெறுப்பேற்றினர். இதனால் அவர் வெளிநடப்பு செய்தார். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் மீது தண்ணீர் போத்தல் வீசப்பட்டது. அதிமுகவில் நடந்த இந்த உச்சகட்ட மோதலை வீட்டில் ெதாலைக்காட்சி முன்பாக அமர்ந்து, முறுக்கு சாப்பிட்டுக்கொண்டே சசிகலா ரசித்துக் கொண்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
சென்னை: அதிமுக இணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்க அக்கட்சியின் ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு விரைந்துள்ளார்.
இதனால், பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதலின்றி பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அதிமுக சட்ட விதிகளுக்கு முரணா னது எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த பழனிசாமி முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ் மனுவில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்தச் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் மேற்ெகாண்டுள்ள ெடல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர ேமாடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முக்கிய பாஜக தலைவர்களை அவர் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என்று பாஜக ஏற்கெனவே வெளிப்படையாகக் கூறிவிட்டது.
இந்நிலையில், அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகளும் ஈபிஎஸ் பக்கம் நிற்பதால் பாஜக ஆதரவும் அவருக்கே இருக்கலாம் என வும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட் டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.
இதுகுறித்து மட்டுமே ஈபிஎஸ், ஓபிஎஸ்சை தான் சந்தித்துப் பேசிய தாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஜூலை 11ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமிதான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வருவார் என அதி முக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

