மதுரை: வரதட்சணை கொடுமை குறித்து பெண் ஒருவர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித் திருந்த நிலையில், கணவர், மாம னார், மாமியார் என குடும்பத்தோடு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை, டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் அழகர். துணிக்கடை உரிமையாளரான இவரது மகள் வர்ஷாவுக்கும், 24, மதுரை கே.புதூரைச் சேர்ந்த மின் வாரிய உதவி இயக்குநர் கொண்டல் ராஜின் மகன் ஜனார்த்தனனுக்கும், 29, கடந்த 2020ல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடை பெற்றுள்ளது.
திருமணத்துக்கு முன்பே நிலம் வாங்குவதற்காக ஜனார்த்தனன் குடும்பத்தாரிடம் ரூ.23 லட்சம் பணத்தை பெண் வீட்டார் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில், திருமணத்தின் போது 300 சவரன் தங்க நகைகளை வர்ஷாவுக்குப் போட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இன்னும் அதிகமாக வரதட்சணை கேட்டு வர்ஷாவைத் துன்புறுத்தி உள்ளனர் கணவர் வீட்டினர்.
ஜனார்த்தனனும் அவரது தந்தை கொண்டல்ராஜும் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் ரகளை செய்து வர்ஷாவை அடித்து துன்புறுத்தியதோடு மட்டுமன்றி, அழகர் நடத்தி வந்த துணிக்கடையையும் வரதட்சணையாகக் கேட்டுள்ளனர்.
தொடர் கொடுமைகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வர்ஷா 'ஷாம்பூ'வை உட்கொண்டு உயிரை விடத் துணிந்து, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந் தார். அவருக்கு குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்த துன்புறுத்தல் இறுதியாக கொலை மிரட்டல் வரை சென்றுள்ளது.
இதையடுத்து, கணவர் வீட்டி னரின் கொடுமைகளைத் தாள முடியாமல் வர்ஷா தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பி வந்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் சமா தானப்படுத்தி மகளை கணவருடன் வாழவைக்க திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின்னரும், கொடுமைப் படுத்துவது ஒரு முடிவுக்கு வராத தால், வர்ஷா திலகர்திடல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
ஜனார்த்தனன் தகவல்தொழில் நுட்பத்துறையில் பெரிய பதவியில் இருப்பதாகக் கூறி திருமணம் செய்துகெண்டதாகவும் இப்போது அவர் சாதாரண பொறுப்பில்தான் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் வர்ஷா புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து, வரதட்சணை கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கணவர் ஜனார்த்தனன், அவரது தந்தை கொண்டல்ராஜ், தாய் சுமதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.