காலிழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.68 கோடி இழப்பீடு

காலிழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.68 கோடி இழப்பீடு

1 mins read
acc83c29-99d2-42dc-99fb-403ce0462305
-

தேனி: அர­சுப் பேருந்து மோதி தனது வலது காலை இழந்த ராணுவ வீர­ருக்கு ரூ.1 கோடியே 68 லட்­சத்தை இழப்­பீ­டாக வழங்­கும்­படி தமிழ்­நாடு அர­சுப் போக்கு­வ­ரத்­துக் கழ­கத்­துக்கு திருச்சி நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

தேனி மாவட்­டம், வேம்­பூர் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் தன­சே­கர பாண்­டி­யன், 37. முன்­னாள் ராணுவ வீரர். கடந்த 2018ஆம் ஆண்­டில் இந்­திய ராணு­வத்­தில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்­த­போது விடு­மு­றைக்­காக மனை­வி­யின் சொந்த ஊரான திருச்­சிக்கு வந்­தி­ருந்­தார்.

அப்­போது, இரு­சக்­கர வாக­னத்­தில் திருச்சி, மண்­டை­யூர் பகு­திக்­குப் பய­ணம் சென்­று­கொண்­டி­ருந்­த­போது தன­சே­கர பாண்­டி­யன் மீது அர­சுப் பேருந்து மோதி­யது. இதில், அவ­ரது வலது­கால் நசுங்­கி­யது. அறுவை சிகிச்சை மூலம் அவ­ரது கால் துண்­டிக்­கப்­பட்­டது.

அதன் கார­ண­மாக, ராணு­வத்­தில் இருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

அதை­ய­டுத்து, தனக்கு நஷ்ட ஈடு கோரி அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் மீது திருச்சி நீதி­மன்­றத்­தில் தன­சே­கர பாண்­டி­யன் வழக்­குத் தொடர்ந்­தார்.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி சோம­சுந்­த­ரம், பாதிக்­கப்­பட்ட ராணுவ வீர­ருக்கு அர­சுப் போக்கு வரத்­துக் கழ­கம் 1 கோடியே 68 லட்­சம் ரூபாய் நஷ்­ட­ஈ­டாக வழங்கு ­வ­தற்கு உத்­த­ர­விட்­டார்.

தன­சே­க­ரன் பாண்­டி­ய­னுக்கு இன்­னும் 13 ஆண்­டு­கள் ராணு­வத்­தில் பணி­பு­ரி­வ­தற்­கான வாய்ப்­புள்ள நிலை­யில், விபத்து நடந்­துள்­ளது. எனவே, 13 ஆண்டு சம்­ப­ளம், மருத்­து­வச் செல­வு­களைக் கணக்­கிட்டு அதன் அடிப் ­ப­டை­யில் ரூ.1 கோடியே 68 லட்­சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்­த­ர­விடப்­பட்­ட­தாக வழக்­க­றி­ஞர் முத்­து­மாரி தெரி­வித்­தார்.